கழுத்தை நெறிக்கும் கடனை கூட திரும்ப கொடுக்க வெறும் ஒரு ரூபாய் இருந்தால் போதும்!

- Advertisement -

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஒருவர் ஒருவருக்கு கடன் பட்டு இருப்பார்கள். ஏன் ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் இங்கு யாரும் வாழ முடியாது. தொழில் நடத்துபவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலையை பார்ப்பவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கித் தான் ஆக வேண்டும் ஆனால் இந்த கடன் சற்று அதிகமாகும் பொழுது அது உங்களையும் பாதிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் பாதிக்கும். ஏன் உங்கள் வீட்டில் இருக்கும் சந்தோஷம் சிறிது சிறிதாக தொலைந்து போகும். அதனால் சுமக்க முடியாத கடன் பாரத்தை சுமந்து கொண்டு இருப்பவர்களுக்கு அந்த கடனை அடைத்து நிம்மதியாக வாழ்வதற்கு ஆன்மீக ரீதியான ஒரு பரிகாரத்தை பற்றி தான் நாம் இன்று இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

-விளம்பரம்-

சூழ்நிலை

பணம் வாங்குவது, கொடுப்பது என எது செய்வதாக இருந்தாலும் அதை நேரம் பார்த்து செய்ய வேண்டும். என்று நாம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் குளிகை நேரத்தில் கடன் வாங்கி இருந்தால் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும். குளிகையில் கடன் வாங்கினால் நீங்கள் அந்த கடனை அடைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும் என்னதான் நீங்கள் கஷ்டப்பட்டு பணத்தை புரட்டி கடனை அடைக்க நினைத்தாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக அந்தப் பணத்தை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் தான் இன்று அடைக்க முடியாத கடனையும் அடைப்பதற்கான பரிகாரத்தை பற்றி பார்க்க போகிறோம்.

- Advertisement -

பரிகாரம்

இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டும் என்றாலும் செய்யலாம் ஆனால் நீங்கள் இந்த பரிகாரம் செய்யும் நேரம் குளிகை நேரமாக இருந்தால் மட்டும் போதும். இதற்கு முதலில் வாடாமல், கரும்புள்ளிகள் இல்லாமல் இருக்கும் நல்ல வெற்றிலையை காம்புடன் எடுத்துக் கொண்டு. அதனுடன் இரண்டு கொட்டா பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து. நகைக்கடைகளில் நகையை வைத்து கொடுக்கும் ரோஸ் கலர் பேப்பர் ஒன்று எடுத்துக் கொண்டு அதில் நாம் வைத்திற்கும் வெத்தலை, பாக்கு, நாணயத்தை வைத்து மடித்துக் கொள்ளுங்கள்.

கடன் வாங்கியபவர் பெயர்

இவ்வாறு மடித்த வெற்றிலையை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி உங்களின் குலதெய்வத்தை மனம் உருகி வேண்டி நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ யார் கடனை அடைக்க போகிறீர்களா அவர்களின் பெயரை சொல்லி அந்த கடனை அடைக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு குளிகை நேரம் முடிவதற்குள் மடித்த வைத்திருக்கும் வெற்றிலையை நீங்கள் பணம் வைத்து புழங்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த சில நாட்களிலேயே அதன் சக்தியை நீங்கள் உணர்வீர்கள். பணம் இல்லாதவர்களிடம் பண வரவு அதிகரிக்கும். கடல் அளவு உள்ள கடனை கூட சில நாட்களில் நீங்கள் அடைத்து விடுவீர்கள். அந்த அளவிற்கு இது சக்தி வாய்ந்த பரிகாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here