By: PREM KUMAR
கோழித்துண்டுகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வேகவைத்த கோழித்துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப் பருப்பு தாளிக்கவும்.
எல்லாம் நன்கு சிவந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்
பிறகு கோழித் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் வதக்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
அவ்வளவு தான் சுவையான சிக்கன் பொடிமாஸ் தயார் சுட சுட குடும்பத்துடன் சாப்பிடுங்கள்