By: PREM KUMAR
விடியற்காலையில் எழுந்து வேகமாக குளிக்க வேண்டும். அப்படி குளிப்பது ஆறு, குளம் போன்றவற்றில் குளிப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும்.
ஏகாதசி தினத்தில் ஏகாதாசியை பற்றிய கதைகளை படிக்கலாம் அல்ல கேட்கலாம். ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்
வீட்டில் அல்லது பூஜை அறையில் விஷ்ணு மற்றும் மகாலட்சுமி தாயின் படங்களை வைத்து அதற்கு நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்
அப்படி வழிபடும் போது சாமிக்கு மலர், மலர் மாலை, இனிப்பு மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்
ஏகாதசி தினங்களில் விஷ்ணுவில் பூஜையில் கண்டிப்பாக துளசி இடம்பெற வேண்டும் துளிசி இல்லாமல் பூஜை முழுமை பெறாது.
விஷ்ணு கோவிலுக்கு சென்று விஷ்ணு பகவானை வழிப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு நபருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.
ஏகாதசி விரதம் நிறைவு செய்யும் போது மறக்காமல் சாத்வீக உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்
ஏகாதசியன்று இந்த விஷயங்களை சரியாக செய்தால் விஷ்ணு பகவானின் மனம் குளிரும்.