By: PREM KUMAR
புனர்பூசம், பூராட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும். தனசு, மீனம் ராசியில் பிறந்தவர்களும் விரதம் இருக்கலாம்.
அதே போல் ஆங்கில மாதத்தில் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களும் வியாழன் அன்று குரு பகவானுக்கு விரதம் இருந்து வழிபடலாம்.
வளர்பிறை வியாழகிழமைகளில் விடியற்காலையில், மஞ்சள் நிற அடை அணிந்து நெற்றியில் சந்தனம் பூசிக்கொள்ளுங்கள்.
பின் பூஜையறையில் தட்சிணாமூர்த்தி படத்தை மஞ்சள் நிற துணி விரிப்பில் கிழக்கு திசையை பார்த்தவாறு வைத்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, ஆறு அகல் விளக்கு தீபங்கள் ஏற்றுங்கள்.
பின் நைவேத்தியமாக தட்சிணாமூர்த்திக்கு இனிப்புகள், கொண்டைக்கடலைகள், சர்க்கரை பொங்கல், கற்கண்டுகள் வைக்கலாம்.
அதன் பின் தட்சிணாமூர்த்திக்கு தீபாராதனை காட்டி, குரு பகவானுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜையை நிறைவு செய்ய கொள்ளுங்கள்.
இப்படி வியாழக்கிழமை விரதம் இருக்கும் போது ஒரு வேளை மட்டும் உணவு உண்பது சிறப்பானதாக இருக்கும்
இவர்கள் எல்லாம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு இப்படி விரதம் இருந்து பூஜை செய்யலாம்