Advertisement
ஆன்மிகம்

வீட்டின் பண கஷ்டம் நீங்க வெறும் 33 ரூபாய் போதும்! நம்பிக்கையுடன் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Advertisement

பொதுவாக பணக்கஷ்டம் என்பது அனைவருக்கும் இருந்து விடாது சிலருக்கு பண தேவைகள் இருக்கும் ஆனால் அவர்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பணகஷ்டம் என்பது ஒரு குடும்பத்துடைய வருமானமே மாதம் 15 ஆயிரம் இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் மாத செலவு மட்டும் 20 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இது போன்ற வீடுகளில் பணக்கஷ்டம் என்பது இருந்து கொண்டே இருக்கும். இப்படி வீட்டின் பணக்கஷ்டம் மற்றும் உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பண கஷ்டங்களையும் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காண இருக்கிறோம் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதனால் தொடர்ந்து வாருங்கள் பதவிற்குள் போகலாம்.

மகாலட்சுமியின் அனுகிரகம்

நாம் வாரத்தில் வெள்ளி செவ்வாய் இந்த இரண்டு நாட்கள் செய்யும் பூஜையும் பரிகாரங்களும் நமக்கு பெரும் அளவில் கை கொடுக்கும் இந்த இரண்டு தினங்களை செய்யப்படும் பூஜைகளை மங்கள வார பூஜைகள் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்த நாட்களில் மகாலட்சுமி தாயின் அனுகிரகம் நமக்கு அதிக அளவில் கிடைக்கும். இந்த நாளில் நாம் மகாலட்சுமி தாயாருக்கு ஒரு சிறிய பரிகாரம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான கடன்களும் அடைந்து பண வரவு என்பது வீட்டில் அதிகரிக்கும். அதனால் இன்று இந்த பரிகாரம் எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

Advertisement

பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு வெள்ளிக்கிழமை உகந்த நாளாக இருக்கும் அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அப்படி இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு கண்ணாடியால் செய்யப்பட்ட பவுல் அல்லது மண்ணால் செய்யப்பட்ட ஒரு பவுல் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று தேவைப்படும். அப்படி இந்த இரண்டில் ஏதாவது ஒரு பவுல் எடுத்துக்கொண்டு அந்த பவுலில் முக்கால்வாசி வரை கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேலாக மூன்று பத்து ரூபாய் தாள் மற்றும் மூன்று ஒரு ரூபாய் நாணயம் வைக்க வேண்டும் ஆக மொத்தம் 33 ரூபாய் இருக்க வேண்டும். அதுவும் இந்த கணக்கில் தான் இருக்க வேண்டும். இப்படி பவுலில் கல் உப்பு எடுத்துக்கொண்டு அதற்கு மேல் 33 ரூபாய் வைத்து அந்த பவுலை மகாலட்சுமி தாயாரின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். பின்பு மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து உங்கள் நகை அடமானத்தில் இருந்தாலும், உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து, உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆறு வாரங்கள்

இப்படி நீங்கள் வெள்ளிக்கிழமை காலை

Advertisement
அல்லது மாலை எப்பொழுது பூஜை செய்தாலும் பூஜை செய்து முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை முழுவதும் இந்த பவுல் பூஜை அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பின் மறுநாள் சனிக்கிழமை காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து முடித்துவிட்டு பவுலில் உப்பின் மீது வைத்திருந்த 33 ரூபாய் எடுத்து உங்கள் பீரோவில் தனியாக பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பணத்தைக் காரணம் கொண்டும் செலவு செய்யக்கூடாது. கல் உப்பு உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது மனிதனின் காலடி
Advertisement
படாத இடங்களில் கொட்டி விடுங்கள் இதை போல் அடுத்த வாரம் அந்த பவுலில் கல் உப்பு நிரப்பி புதியதாக மறுபடியும் 33 ரூபாய் வைத்து பரிகாரம் செய்து இப்படியே தொடர்ந்து ஆறு வாரம் வெள்ளிக்கிழமை செய்து வர வேண்டும்.

உண்டியலில் செலுத்தி விடுங்கள்

இந்த ஆறு வார பூஜையை பெண்கள் தொடர்ந்து கடைபிடித்து வரும்போது மாதவிடாய் வரும் நேரங்களில் வீட்டில் உள்ள கணவன் அல்லது வீட்டில் உள்ள குழந்தைகளை இந்த பூஜை செய்ய சொல்லலாம். இப்படி 6 வாரமும் இந்த பூஜையை செய்து பூஜை முடித்த பின் கல் உப்பை மனித காலடிகள் படாத இடங்களிலும் அல்லது நீர் நிரைகளிலும் கொட்டி. எல்லா வரமும் வைக்கும் 33 ரூபாயை பத்திர படுத்தி வரவும். பின் ஆறு வாரம் வைத்த 33 ரூபாய் பணத்தை எடுத்து உங்கள் வீட்டின் அருகில் உள்ள மகாலட்சுமி தாயாரின் கோவிலில் சென்று இந்த பணத்தை தாயாரின் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி அங்கு உள்ள மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து மனம் உருகி உங்கள் வேண்டுதல்களை சொல்லிவிட்டு வாருங்கள்.

பண வரவு அதிகரிக்கும்

இப்படி நீங்கள் ஆறு வாரங்கள் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்து பின் பத்திரபடுத்திய 33 ரூபாயை தாயாரின் கோவில் சென்று உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு. மகாலட்சுமி தயாரை வேண்டிய பின் உங்களுக்கான பண வரவுகள் அதிகரிக்க தொடங்கும் உங்களின் பண தேவைகள் பூர்த்தியாகும். ஏன் நீங்கள் அடமானத்தில் வைத்திருந்த நகைகள் கூட உங்கள் வீடு திரும்ப அதற்கான வாய்ப்புகள் கை கூடும். இந்த ஒரு பரிகாரம் உங்களின் வாழ்க்கையை கூட மாற்றும் அதனால் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 மணி நேரம் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

9 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

19 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

22 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago