Advertisement
ஆன்மிகம்

மீள முடியாத கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு பணம் சேர வேண்டுமா ? அமாவாசை அன்று இதை மட்டும் செய்யுங்கள்!

Advertisement

இன்றைய நவீன காலத்தில் கடன் வாங்காமல் வாழ்பவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். நான் சிறுவயது முதல் கடன் வாங்கியது இல்லை என்று யாராவது கூறினால் கூட நீங்கள் யாருக்காவது கண்டிப்பாக வேறு வழிகளில் கடன் பட்டிருப்பீர்கள். அதனால் கடன் வாங்குவது என்பது எல்லோருடைய வாழ்விலும் பொதுவான ஒரு விஷயம். ஆனால் ஒரு சிலர் கடன் வாங்கும் போது அவர்களது நேரம் மற்றும் சூழ்நிலை சரியில்லை என்றால் அவர்கள் அந்த கடனில் இருந்து மீளவே முடியாத அளவில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் என்னதான் அந்த கடனை அடைக்க நினைத்தாலும் பல தடகைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதனால் இன்று மீற முடியாத கடனிலிருந்து மீள்வதற்காக இந்த ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்தால் போதும் உங்கள் கடன் தொல்லை முழுவதுமாக அடைந்து விடும். அது என்ன பரிகாரம் என்பதை நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள்.

கடன்

நாம் பரிகாரத்தை பார்ப்பதற்கு முன்பாக அனைவரும் இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். கடன் வாங்குவதில் தவறு இல்லை அப்படி நீங்கள் கடன் வாங்குவதற்கு முன்பாக ஒரு ஒருமுறை நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் இப்பொழுது இந்த கடன் வாங்குவது அவசியம் தானா ? என்று முதலில் யோசிங்கள். இந்த கடனை வாங்கினால் அடைக்க முடியுமா ? என்பதை இரண்டாவதாக யோசித்துக் கொள்ளுங்கள். மூன்றாவது ஆக நீங்கள் கடன் வாங்கி இந்த செயலை செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா ? என்பதையும் யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு சிலர் தேவையில்லாத ஆடம்பர செலவுக்காக கடன் வாங்கி சிக்கிக் கொள்வார்கள். அதனால் கடன் வாங்குவதற்கு முன்பாக இந்த மூன்று கேள்விகளையும் நீங்களே உங்களிடம் கேட்டுக் கொண்டு பின்பு கடன் வாங்குங்கள்.

Advertisement

எலுமிச்சை பழம்

மீள முடியாத கடனிலிருந்து மீள்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை அமாவாசை வருவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு எலுமிச்சம் பழம் தேவைப்படும் அதனால் முற்றிலும் மஞ்சள் நிறமாக, கரும்புள்ளிகள் இல்லாத நல்ல பழமாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள். அப்படி வாங்கி கொண்டு வந்த பழத்தை ஒரு டம்ளர் அல்லது கிண்ணம் எடுத்துக் கொண்டு அதில் பன்னீர் ஊற்றி அதில் நாம் வாங்கிய அந்த எலுமிச்சம் பழத்தை போட்டு ஒரு மணி நேரங்கள் அப்படியே வைத்து விடுங்கள். நீங்கள் இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறையான ஆற்றல்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

மஞ்சள் நிற துணி
Advertisement

அதன் பின்பு நீங்கள் பயன்படுத்தும் கர்ச்சிப் அளவிற்கு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொண்டு மஞ்சள் துணியை விரித்து வைத்து அதில் நாம் பன்னீரில் போட்ட எலுமிச்சம் பழத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் யாரிடம் கடனாக பணம் வாங்கினீர்களா அவர்கள் பெயர், எவ்வளவு பணம் வாங்கினீர்கள் நீங்கள் எப்பொழுது திருப்பிக் கொடுக்க நினைக்கிறீர்கள் என்பதனை அந்த வெள்ளை பேப்பரில் தெளிவாக எழுதிக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழத்துடன் இதையும்

Advertisement
வைத்து கொள்ளுங்கள் பின்பு துணியை நான்கு மூலைகளையும் ஒன்று சேர வைத்து ஒரு மஞ்சள் நிற நூலால் சுற்றி கட்டு கொள்ளுங்கள்.

அம்மாவாசை

இப்படி முடிஞ்சா முடிந்து வைத்த இந்த மூட்டையை நீங்கள் இரவு உறங்குவதற்கு முன்பாக உங்கள் தலையணைக்கடியில் வைத்து உறங்கி விடுங்கள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும் அதன் பின்பு மூன்றாவது நாளான அமாவாசை தினம் அன்று நீங்கள் தூங்குவதற்காக பயன்படுத்திய தலையணை உறைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை ஊறவைத்து நன்கு துவைத்து விடுங்கள். அதன் படிக்க நீங்கள் தலையணைக்கடியில் வைத்து உறங்கிய முடிச்சையும் உங்கள் தலையை சுற்றி மனித காலடிகள் படாத இடங்களில் போட்டு விடுங்கள் அல்லது உங்கள் வீட்டில் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளில் போட்டு விடுங்கள்.

துர்க்கை அம்மன்

பின்பு நாம் அந்த முடிச்சை தூக்கி போட்ட பின்பு அன்றைய நாள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு ராகு காலத்தில் சென்ற ஒன்பது எலுமிச்சம் பழங்களை மாலையாக கோர்த்து அம்மனுக்கு சாற்றி விட்டு தீபம் ஏற்றி அம்மனை வழிபடுங்கள். நீங்கள் அம்மனை வழிபடும் போது நீங்கள் வெள்ளை பேப்பரில் எழுதிய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை மனதார அம்மனிடம் கூறி மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் உங்கள் கடன் பிரச்சனை தீர்வதோடு மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் பண வரவையும் அதிகரித்து உங்கள் வீட்டின் பணப்புழக்கம் எப்பொழுதும் இருக்கும் படி செய்துவிடும் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

11 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

19 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago