வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும்பாலான அசைவ பிரியர்கள் மட்டன் தான் அதிகமாக சமைப்பார்கள். அசைவப் பிரியர்களின் முதன்மையான தேர்வு மட்டன் குழம்பாகவே இருக்கும், குறிப்பாக வீக் எண்ட் நாட்களில் மட்டன் உணவு விரும்புகிற அசைவப் பிரியர்கள் அதிகம். அசைவம் என்றால் போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிலருக்கு கோழி, மீன், இறால், நண்டு போன்றவை பிடிக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு ஆட்டுக்கறி பிடிக்காது, ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பை விரும்பி சாப்பிடுவர்கள்.
நாம் எப்பொழுது மட்டன் வாங்கினாலும் மட்டனை பயன்படுத்தி அதிக பட்சமாக மட்டன் குழம்பு அல்லது மட்டன் கிரேவி மட்டும் தான் பெரும்பாலும் சமைப்போம். அதுவும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு வைக்கும் பொழுது மட்டன் பிரியர்களுக்கு அதை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அப்படி விரும்பி சாப்பிடுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகுப்பில் ஆந்திரா ஸ்டைல் ஆட்டுக்கறி குழம்பு மிகவும் சுவையாக எப்படி வைக்கலாம் என்று பார்க்கலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இதன் செய்முறை எளிது என்பதால் பேச்சுலர்களும் இதை செய்து சாப்பிடலாம்.
ஆந்திராவில் மட்டனை வைத்து வேறுமாதிரியான ரெசிபிகள் தயார் செய்வார்கள் அப்படி வைக்கப்படும் ஒவ்வொரு மட்டன் ரெசிப்பிகளுக்கும் ஒரு தனி வகையான ருசியும், மணமும் கொண்டும் இருக்கும். ஆந்திரா உணவுகள் அனைத்தும் நல்ல காரமாகவும், சுவையுடனும் இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வளவு அருமையாகவும், காரமாகவும் இருக்கும். இந்த மட்டன் குழம்பு சாபிடுவதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…
வீட்டில் வேலை பார்த்து பார்த்து ரொம்ப சலிச்சு போனவங்க இட்லி தோசைக்கு பேச எந்த சட்னியும் அரைக்காமல் இந்த மாதிரி…
ரோட்டு கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! ரோட்டுக்கடை…
பொதுவாக ஆன்மீகத்தில் பலரால் நம்பப்பட்ட ஒரு சில விஷயங்கள் ஒரு சில காலகட்டத்தில் மிகவும் சுவாரசியமாக பேசப்படும். அதேபோல் ஆன்மிகத்தை…
முலாம்பழம் வச்சு சர்பத்தா அப்படின்னு யோசிக்கிறீங்களா! ஆமாங்க முலாம் பழம் வச்சு சூப்பரான இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு சுவைல…
வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…