Advertisement
சைவம்

ருசியான பட்டை அவரை பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

Advertisement

பட்டை அவரைக்காய் பொரியல் இனி இப்படி செய்து சுட சுட சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பட்டை அவரைக்காய் பொரியல் | Avaraikkai Poriyal Recipe In Tamil

Print Recipe
பட்டை அவரைக்காய் பொரியல் இனி இப்படி செய்து சுட சுட சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword avaraikkai poriyal, அவரைக்காய் பொரியல்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time
Advertisement
21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 250 கிராம் பட்டை அவரைக்காய்
  • 8 சின்ன வெங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • ¼ டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு

Instructions

  • முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும். அடுத்து துவரம் பருப்பை ½ மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • அவரைக்காய் நறுக்கி குக்கரில் சேர்த்து துவரம் பருப்பை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த அவரைக்காயை போட்டு தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்.
  • தண்ணீர் வற்றியதும் அதில் தேவையான அளவு உப்பு, தேவைக்கேற்ப மிளகாய் தூள், சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வைக்கவும்.
  • பின்பு வேக வைத்த துவரம் பருப்பை அதில் சேர்க்கவும். அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து பச்சை வாசனை போக மெதுவாக வதக்கவும்.
  • கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

6 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

16 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago