பொதுவாக அனைவரது வீட்டிலும் எந்த அறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ இல்லையா கண்டிப்பான முறையில் பெண்கள் வீட்டில் உள்ள பூஜை அறைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஏன் வீட்டில் பூஜை செய்வதற்கு என்று தனியாக அரை இல்லாவிட்டாலும் அதற்காக தனி இடத்தையை ஒதுக்கி விடுவார்கள். அந்த பூஜை அறையில் பலவிதமான சாமி படங்களை வைத்து நாம் தினசரி வழிபட்டு வருவோம்.
ஆனால் அதற்கு மாறாக நாம் பூஜை அறையில் வைத்திருக்கக் கூடாது என்றும் சில சாமி படங்கள் இருக்கின்றது. அப்படி அந்த படங்களை நாம் பூஜை அறையில் வைத்திருப்பதன் மூலம் நமக்கு கஷ்டங்களை மட்டும் தரும். அப்படி என்ன என்ன சாமி படங்களை வீட்டில் பூஜை அறையில் வைக்க கூடாது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
நாம் வீட்டில் இருக்கும் கடவுள்களின் திருவுருவப்படங்களில் ருத்ர தாண்டவம், கோவத்தில் இருப்பது போன்று, தலைவிரி கோலமாக இருப்பது, கொடூரமாக, தவம் செய்வது போன்ற திரு உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது.
சனீஸ்வரர் பகவான் ஒரு நீதியின் கடவுளாக திகழ்பவர் இவரின் திரு உருவப்படங்களை வீட்டிலேயே அல்லது பூஜை அறையிலையோ வைக்க கூடாது. இது மட்டுமில்லாமல் நவகிரகங்களின் படங்களை கூட பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது.
சிவபெருமானின் அவதாரமான நடராஜரின் உருவ சிலையோ அல்லது உருவப்படங்களை கூட நாம் வீட்டில் வைக்க கூடாது. அது போல சிவபெருமான் கோபப்படுவது போன்ற படங்களையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. மாறாக சிவபெருமான் சாந்தமாக
இருப்பது அல்லது தியானம் செய்வது போன்ற திரு உருவ படங்களை வைத்துக் கொள்ளலாம்.நம் வீட்டு பூஜை அறையில் அல்லது வீட்டிலேயே கிழிந்த கடவுள்களின் திருவுருவப்படங்களை அல்லது உடைந்து சிதைந்து போன கடவுள்களின் சிலைகளையும் வைத்து இருக்கக் கூடாது.
நாம் வீட்டில் வைத்திருக்கும் கடவுள்களின் படங்களில், கடவுள்கள் எழ்மையாக இருப்பது போன்றும் முட்டை அல்லது கோவணம் கட்டியவாறு இருக்கும் முருக பெருமானின் படத்தையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது.
கோபமாக இருக்கும் காளி தேவியின் திருவுருவப்படத்தை எக்காரணம் பண்ணும் வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடாது அதுபோல் முருகன் திருவுருவப்படத்தில் முருகனின் தலைக்கு மேல் வேல் இருக்கும் படியான திருவுருவப்படங்களையும் பூஜை அறையில் வைக்க கூடாது.
ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…
பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…
கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…
View Comments
Super information thank u