மில்க் ஷேக்குகள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ண கூடியது. நிறைய மில்க் ஷேக்குகள் அருந்துவதற்கு கடைகளில் கிடைக்கிறது. ஆனால் நாமே சுவையாகவும் சத்தாகவும் பேரிச்சம் பழம் மற்றும் டிரை ப்ரூட்சை வைத்து பேரிச்சம்பழம் மில்க் ஷேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பேரிச்சம்பழம் மில்ஷேக்கில் அதிக அளவு இரும்பு சத்து நார்ச்சத்து நிறைய வைட்டமின்கள் எல்லாம் இருக்கிறது.
குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் கடைகளிலிருந்து மில்க் ஷேக்குகள் ஜூஸ்கள் வாங்கித் தருவதை விட நாமே செய்து கொடுக்கும் பொழுது அதன் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. குழந்தைகளுக்கும் சத்து நேரடியாக செல்கிறது காரணம் நாமே செய்து கொடுக்கும் பொழுது நமக்கு ஏற்படும் மன திருப்தி அவர்களுக்கு மகிழ்ச்சி என இரண்டும் நிறைந்திருக்கிறது. பேரிச்சை பழம் உலர்ந்த நட்ஸ்கள் உடலுக்கு வலிமை தரக்கூடியவை.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கும் ரத்தத்தை சுத்தம் செய்வதற்கும் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கும் இவை பயன்படுகின்றன. இவற்றை பாலோடு கலந்து உண்ணும் பொழுது அதிக அளவில் கால்சியம் வைட்டமின் புரோட்டின் இரும்பு சத்து அனைத்தும் கிடைக்கின்றது. இதில் சர்க்கரை சேர்க்காமல் செய்வதால் இயற்கையான சுவையுடன் மிகவும் சத்தாக இருக்கும். பேரிச்சம்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்தின் செயல்பாட்டை வலுவாக்குகிறது. கர்ப்பிணி பெண்கள் பேரிச்சம்பழத்தை உண்டு வருவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் எடையை குறைக்கலாம். பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைக்கும்.
மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும். இப்போது சுவையானசத்து மிக்க பேரிச்சம்பழ மில்கஷேக் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…