சிலர் எப்பொழுதும் என்னிடம் பணமில்லை என்று கூறுவதால் அவர்கள் உழைக்க மாட்டார்கள் என்று நினைத்து விடாதீர்கள் பலரும் இங்கு கடினமாக உழைக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு வரும் வருமானம் அவர்கள் செய்யும் செலவுகளை விட குறைவானதாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கையில் எப்படி பணம் இருக்கும். அதுமட்டுமின்றி நம் கையில் பணம் தாங்காமல் வீண் செலவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அதில் முக்கியமாக சொல்லப்படுவது நாம் பணத்தை வைத்து இருக்கும் இடத்தை பொறுத்து தான். ஆம் நீங்கள் தப்பி தவறி இந்த இடத்தில் மட்டும் வைத்து விட்டால் உங்கள் பணம் உங்களுக்கு இல்லை அது என்ன இடம் ஏன் அங்கு பணம் வைக்க கூடாது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
நீங்கள் பணம் எவ்வளவு சம்பாதிப்பாராக இருந்தாலும் சரி நீங்கள் சம்பாதித்த பணத்தை எங்கு வைக்க கூடாது தெரியுமா ? அனைவரின் கண்ணிலும் படம்படியாக இருக்கும் இடங்களில் பணம் வைக்கக் கூடாது. அதேபோல் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் அதனுடன் வரும் உதிரி வருமானங்கள் என இப்படி உங்கள் வருமானம் பற்றிய கணக்கை யாரிடமும் சொல்லக்கூடாது. நீங்கள் சம்பாதிக்கும் பணம் எவ்வளவு என்று உங்களுக்குள் மட்டும் ரகசியமாக வைத்துக்கொள்ள முடிந்த அளவிற்கு முயற்சி செய்யுங்கள்.
அதற்காக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வருமானத்தை சொல்லாமல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை உங்கள் வீட்டில் இருக்கும் கணவன் மனைவி குழந்தைகள் என்னை இப்படிப்பட்டவர்களுக்கு உங்களுடைய வருமானத்தை தெரியப்படுத்துவதில் எந்தவித தவறும் கிடையாது. ஆனால் உங்கள் குடும்பத்தை தவிர மூன்றாவது நபர் யாரிடமும் உங்கள் வருமானத்தை நீங்கள் தெரியப்படுத்தும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது ஆனால் தற்போதைய நாட்களில் வீட்டில் இருக்கும் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று எவருக்கும் தெரிவது, இப்படி சொல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட நாம் வீட்டிற்கு இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்.
நிறைய நபர்கள் தங்கள் வருமானத்தில் இருந்து பணத்தை எடுத்து வீட்டு செலவுக்கு என்ன ஒரு பர்ஸில் வைத்திருப்பார்கள். அந்த பர்சையும் அலட்சியமாக வீட்டின் வரவேற்பு அறையில் வைத்து பயன்படுத்துவார்கள். இனி இவ்வாறு செய்யாதீர்கள் மேலும் உங்கள் குடும்பத்தினரை தவிர யாருக்காவது மூன்றாவது நபருக்கு பணம் கொடுக்கும் போது ஒட்டு மொத்தமாக பர்சிலிருந்து மொத்த பணத்தையும் எடுத்து அதிலிருந்து ஒரு சில ரூபாய் தாள்களை எடுத்து கொடுப்பதையும் தவிர்த்து விடுங்கள். பணம் என்பதை யார் கண்ணுக்கும் தெரியாதபடி தான் எடுத்துக் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் இவர் என்ன எவ்வளவு
பணம் வைத்திருக்கிறாள் என்ற எண்ணத்துடன் பார்த்துவிட்டால் உங்கள் கையில் இருக்கும் பணம் மடமடவன செலவாகிவிடும்.அதனால் எப்போதுமே பணத்தை அடுத்தவர்களுக்கு தெரியும் படியான இடங்களில் வைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பணத்தை படுக்கை அறையில் உள்ள பெட்டிகள் அல்லது படுக்கையில் வைத்திருக்கும் பீரோவில் வைத்து பயன்படுத்துங்கள் சிலர் வீட்டில் படுக்கையில் உள்ள மெத்தை மற்றும் கட்டிலின் அடியில் கூட பணம் வைத்து பயன்படுத்துவார்கள். அப்படி செய்தால் உங்களிடம் இருக்கும் பணம் வீணாக செலவாகி கொண்டே இருக்கும். முடிந்த அளவிற்கு படுக்கையறையிலும் பணத்தை பத்திரப்படுத்தாதீர்கள்.
உங்கள் பணத்தை எந்த இடத்தில் வைத்தால் வீண் விரயமாகாமல் பெருகிக்கொண்டே இருக்கும் தெரியுமா ? ஆம் பூஜை அறையில் தான் பூஜை அறையில் நீங்கள் சுவாமி படங்கள் விளக்குகள் வைத்திருக்கும் இடத்தின் அருகில் இந்த இடத்தில் பணத்தை வைத்தால் பணம் வீண் செலவாகாமல் இருக்கும் என்பவர். அப்படிலாம் கிடையாது நீங்கள் பூஜை அறையில் உங்களுக்கு சவுகரியமான இடம் எதுவாக இருந்தாலும் அங்கு வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக பூஜை அறையில் அலமாரி போன்ற அமைப்பு இருந்தால் அந்த இடத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல் உங்கள் பணத்தை வைத்து எடுத்து கொள்ளலாம். இருந்தாலும் பூஜை அறைகள் வைத்த இடத்திலிருந்து பணத்தை அடிக்கடி எடுக்கக் கூடாது செலவுக்கு என்று தனியாக முன்னகூடியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் இப்போது வெளியே செல்ல போகிறீர்கள் உங்களுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் தேவைப்படுகிறது என்றால் அதற்காக உங்கள் பரிசில் இருக்கும் 500 ரூபாயும் எடுத்துச் சென்று செலவு செய்து விட்டு மீத பணத்தை கொண்டு வந்து பரிசில் வைப்பது இது போன்ற செயல்களையும் செய்யக்கூடாது. உங்களுக்கு தேவையான சில்லறைகளை மாற்றி வைத்துக் கொண்டு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது அந்தளவு பணம் மட்டுமே எடுத்துச் செல்வது உகந்ததாக இருக்கும். அதனால் பணத்தை கையாளும்போது அதை சற்று ஔிவு, மறைவாக தான் கையாள வேண்டும். நான் மேலே சொன்ன அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு பணத்தை கையாளுங்கள் உங்கள் வீட்டில் பண பிரச்சனையே வராது நம்பிக்கையோடு செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…