நாம் நமக்குத் தேவைப்படும் சிறிய அளவிலான பணத்தை சம்பாதிப்பதற்காக அவ்வளவு கஷ்டப்படுவோம். ஆனால் சிலர் கையில் பணம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும் நாம் நம்மை போட்டு பலமுறை குழப்பிக் கொண்டிருந்திருப்போம் எப்படிடா இவனிடம் மட்டும் பணம் வந்து கொண்டே இருக்கிறது என்று. அதேபோல் பணம் நம்மிடமும் புழக்கத்தில் இருக்க வேண்டுமென்றால் முதலில் பணத்தை பார்த்து சலிக்க கூடாது என்னடா இந்த பணத்தை சம்பாதிக்க இவ்வளவு கஷ்டப்படனும் என்ற எண்ணம் உங்களிடம் இருக்கக் கூடாது. நீங்கள் இப்படி இருந்தாலே போதும் பணம் உங்களைத் தேடி வரும். அதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் வரும் பரிகாரங்களையும் விஷயங்களை சரியான பின்பற்றி வாருங்கள் உங்களிடமும் பணம் வந்து சேரும்.
மாதம் சம்பளம் பணம் வந்தவுடன் முதலில் சந்தோசப்பட கற்றுக் கொள்ளுங்கள். சம்பளப் பணம் வந்தவுடன் எவ்வளவு குறைவாக இருக்கிறது இநத பணத்தை வைத்து எப்படி குடும்பத்தை நடத்துவது இதெல்லாம் ஒரு பணமா என்று பணத்தை எப்பொழுதும் திட்டி தீர்க்க கூடாது. உங்களிடம் எவ்வளவுதான் பணக்கஷ்டம் இருந்தாலும் சந்தோஷமாக செலவு செய்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் செய்யப் போகிற செலவு நாளைக்கு உங்களுக்கு பலன் கொடுக்கும் அப்படி நினைத்துக் கொண்டு சந்தோஷமாக செலவு செய்யுங்கள்.
அதற்கென்று தேவையில்லாத அனாவசியமான பொருட்களை வாங்குவதற்கு, ஆடம்பரமான செலவுகளை சந்தோஷமாக செய்யலாமா என்று கேட்கக் கூடாது. இது போன்று ஊதாரித்தனமாக செய்யும் செலவுகளுக்கும் உங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்காக செலவு செய்வது இவை இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் அதனால் உங்களுக்கு என்ன தேவையோ அந்த அத்தியாவசியமான செலவுக்கு மட்டும் சந்தோஷமாக செலவு செய்யுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உருண்டு, பிரண்டு அழுதால் கூட அனாவசியமான செலவுகளுக்கு செலவு செய்யாதீர்கள்.
இப்படி நமக்கு வரும் வருமானத்தில் செலவு மட்டுமே செய்து கொண்டிருக்க முடியுமா அதனால் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பு செய்யவும் பழகிக்கொள்ளுங்கள் சேமிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் பரிகாரமாக நீங்கள் பணம் வைத்து எடுக்கும் இடங்களை நல்ல வாசன நிறைந்த இடமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் பணம் வைத்து இருக்கும் இடத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, துளசி, பட்டை இப்படி வாசனை தரும் பொருட்களை ஏதாவது போட்டு வையுங்கள். அதைப்போல நீங்கள் பணம் எடுத்து வைக்கும் உங்கள் பரிஸ்சிலும் இதில் ஏதாவது ஒரு பொருளை போட்டு வைக்கலாம் இப்படி நீங்கள் போட்டு வைத்திருக்கும் பொருட்களின் வாசனை தீர்ந்தவுடன் மீண்டும் புதிய பொருட்கள் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக இப்பொழுது நீங்கள் பணத்தை யாருக்காவது கடனாக கொடுத்தாலும் அல்லது ஏதாவது பொருளாக வாங்கிவிட்டு பணம் கொடுப்பதாக இருந்தாலும் சரி பணம் உங்களை விட்டுப் போகிறது என்று கவலைப்பட கூடாது அப்படி உங்களை விட்டு செல்கின்ற பணத்தை நீங்கள் திரும்ப சம்பாதித்து விடுவேன் என்ற நேர்மறையான எண்ணத்துடன் கொடுக்க வேண்டும் அதற்காக உழைக்கவும் வேண்டும்.
இப்பொழுது நீங்கள் யாருக்காவது பெரிய அளவில் பணம் கொடுக்கிறிர்கள என்றாலும் அல்லது பெரிய செலவுக்காக பணம் கொடுக்கிறீர்கள் என்றாலும் பணத்தை நீங்கள் அடுத்தவரிடம் கொடுப்பதற்கு முன்பாக நெஞ்சுக்கு நேராக வைத்துக் கொண்டு “சென்று வா” அல்லது “பணம் வசி” என்ற இந்த வார்த்தைகளை மூன்று முறை உச்சரித்து அடுத்தவர்களிடம் கொடுத்தால் உங்களிடம் இருந்து சென்ற பணம் பல மடங்காக பெருகி மீண்டும் உங்களிடமே வேறு வழிகளில் வந்து சேரும்.
தயவுசெய்து பண விஷயத்தில் இப்படி மட்டும் இருந்து
விடாதீர்கள் அதாவது பணத்தை செலவு செய்வதில் கஞ்சனாக இருக்கக் கூடாது. அதாவது ஒரு சிலர் அவர்கள் பையில் இருந்து ஒரு ரூபாய் செலவு செய்வதற்கு கூட அல்பத்தனமாக நடந்து கொள்வார்கள். இது போன்று என்றும் செய்யவே செய்யக்கூடாது. இப்படி நீங்கள் கஞ்சதனமாக நடந்து கொள்ளும் போது உங்கள் பணம் உங்களிடம் பத்திரமாக இருப்பது போன்று தான் இருக்கும் ஆனால் கடைசியிலன எல்லா பணமும் உங்களுக்கே தெரியாமல் வீண் விரயம் ஆகி கொண்டே இருக்கும்.இது போன்ற விஷயத்திற்கு மட்டும் நீங்கள் என்றைக்குமே யோசிக்காதீர்கள் அதாவது யாராவது உங்களிடம் வந்து முடியாத சூழ்நிலையில் உள்ளேன் உதவி செய்யுங்கள் என்று கேட்டால் உங்களிடம் பணம் இருக்கும் பட்சத்தில் தாராளமாக உதவி செய்யுங்கள் இதில் தவறு ஒன்றும் கிடையாது. ஏனென்றால் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிப்போன வார்த்தைகள் அப்படி “தனக்கு போக மீதியுள்ளது தானமும் தர்மமும் தான்” என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்து வாருங்கள். உங்கள் சம்பள பணம் கைக்கு வந்தவுடன் அதில் நீங்கள் முதல் செலவாக யாருக்காவது உதவி செய்வதாக இருந்தால். அது மிகவும் நல்ல விஷயம் இப்படி பட்டவர்களிடம் பணம் சேர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அதனால் இந்த உலகில் யாருக்கு கஷ்ட காலத்தில் உதவி தேவைப்படுகிறது அவர்களின் அந்த கஷ்டம் தீருவதற்கு சரியான நேரத்தில் நீங்கள் உதவி செய்யும் பட்சத்தில் இந்த பிரபஞ்சம் உங்களை வாழ வைத்துக் கொண்டே தான் இருக்கும். ஏன் இந்த பிரபஞ்சத்தின் சக்தியின் மூலமாக உங்களுக்கு கோடி கோடியாக பணம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதனால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்து நீங்களும் வாழுங்கள் அவர்களையும் வாழ வையுங்கள். மேல் சொன்ன இந்த ஐந்து விஷயங்களை நம்பிக்கை உடன் செய்து வாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…