இந்த உலகில் நமக்கு தேவையான செல்வம் என அனைவரும் நினைப்பது பணம் மட்டுமே. ஏனென்றால் நம்மால் இந்த உலகத்தில் பணம் இருந்தால் தான் எதையுமே செய்ய முடியும். ஆனால் இந்த பணத்துடன் சேர்த்து நாம் வாழ்வதற்கு 16 செல்வங்கள் தேவை. இந்த 16 செல்வங்களும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியின் பரிபூரண அருள் நமக்கு வேண்டும். மகாலட்சுமி தேவியின் அருள் நமக்கு வேண்டுமென்றால் சுக்கிர பகவானின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இந்த சுக்கிர பகவானின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்க கஜலட்சுமி பூஜை செய்ய வேண்டும். அதனால் பணம் மட்டுமில்லாமல் அதனுடன் சேர்ந்து எந்த 16 செல்வங்களும் நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
பொதுவாக இருக்கின்ற கிரகங்களிலேயே நாம் வாழ்க்கையை செழிப்பாக வாழ்வதற்கு உதவும் கிரகம் என்றால் அது சுக்கிர கிரகம் தான். சுக்கிர பகவானின் பார்வை எவன் ஒருவன் மீது விழுகிறதோ அவன் மனதில் நினைத்ததெல்லாம் நடக்கும் அவன் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் தான் முடியும் அதனால் சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் வெள்ளிக்கிழமை அன்று ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் கஜலட்சுமி பூஜையை செய்து விட்டால் சுக்கிர பவானி அருளும் நமக்கு கிடைக்கும் அதன் மூலம் நமக்கு லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.
சுக்கிர பகவானின் ஆசியை பெற்று தரும் கஜலட்சுமி பூஜை எவ்வாறு செய்வது என்று முதலில் பார்த்து விடலாம் அதற்கு வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்துவிட்டு உங்கள் பூஜை அறையை சுத்தம் செய்து, உங்கள் வீட்டு வாசலை கூட்டி தெளித்து கோலம் போட்டு உங்கள் பூஜை அறையில் கஜலட்சுமி தயாரின் திருவுருவப் படத்தை வைத்து. அந்த திருவுருவப்படத்திற்கு கஸ்தூரி மஞ்சள் மற்றும் குங்குமத்தை வைத்து அலங்காரம் செய்து நறுமணம் மிக்க மலர்களை சுட வேண்டும். அத்துடன் உங்கள் சௌாகரியத்திற்கு ஏற்றவாறு 27, 51, 108 என்ற எண்ணிக்கையில்
ஏலக்காய் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காயை வைத்து தான் நாம் கஜலட்சுமி தயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி நீங்கள் அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் ஸ்ரீம் மஹா மகாலட்சுமியே நமஹே” என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே அர்ச்சனை செய்ய வேண்டும்.அதன் பின்பு கஜலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைப்பதற்கு பாதம், முந்திரி, பிஸ்தா போன்ற உலர் பருப்புகளுடன் தேனை
கலந்து நெய் வேத்தியமாக வைக்க வேண்டும். பின்பு தயாருக்கு தீப ஆராதனை துபா ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பின்பு நாம் தாயாருக்கு அர்ச்சனை செய்த ஏலக்காயை எடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள், சிறிது குங்குமம் மற்றும் பச்சை கற்பூரம் கலந்து நான்கு இடித்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். இந்த பொடியை உங்கள் வீட்டில் லட்சுமி எங்கெல்லாம் வாசம் செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் எல்லாம் வைத்து விடுங்கள்.பின்பு நாம் தாயாருக்கு நெய்வேத்தியமாக வைத்த பொருளை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக பகிர்ந்து கொடுங்கள். எப்படி வாரம் வாரம் நீங்கள் கஜலட்சுமி தாயாருக்கு பூஜை செய்து உங்கள் வீட்டில் பொடி வைக்கும் போது, உங்கள் வீட்டிற்கு ஒரு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். சுக்கிரனின் பார்வை இல்லாதவர்கள் கூட சுக்கிர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். நீங்கள் ஒவ்வொரு வாரமும் இப்படி பூஜை செய்து பொடி தயார் செய்யும் போது நாம் பழையபடி எடுத்துவிட்டு புதியதாக அந்த இடத்தில் புதிய பொடி வைக்கலாம். நீங்கள் எடுத்த பழைய பொடியை உங்கள் வீட்டில் இருக்கும் பூந்தோட்டியில் போட்டு செடிக்கு தண்ணீர் ஊற்றி விடுங்கள். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் பணம் மட்டுமில்லாமல் 16 செல்வங்களையும் பெற்று செழிப்புடன் வாழ்வீர்கள்.
வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…
அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…
பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…
பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…
மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…