இன்றைய நாட்களில் ஒரு மனிதனின் மதிப்பை தீர்மானிப்பது அவன் செய்யும் வேலையும் அவனிடம் இருக்கும் பணமாக மட்டும் தான் இருக்க முடியும். அது மட்டுமா ஒருவன் என்னதான் படிப்புகள் படித்திருந்தாலும் அவனிடம் நல்ல வேலையும், பணமும் இல்லை என்றால் உறவினர்கள் கூட மதிக்க மாட்டார்கள். அதே மாதிரி ஒருவன் படிக்காதவனாக இருந்தாலும் அவனிடம் பணம் இருந்தால் போதும் அவனுக்கு உண்டான மரியாதையை கொடுத்து அனைவரும் தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள் ஆனால் இங்கு யாரும் வேலை கிடைத்து வேலைக்கு போக வேண்டாம் என்று இல்லை.
ஒவ்வொருவரும் படித்த படி ஒன்றாக இருக்கும் ஆனால் அவர்கள் பார்க்கும் வேலை ஒன்றாக இருக்கும். அதில் வருமானமும் குறைவாகத்தான் இருக்கும். அவன் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் இந்த உலகம் அவனை தூற்ற தான் செய்யும் அதை போல் சிலர் படித்த படிப்பிற்கான வேலையும் அவர்களுக்கு பிடித்த ஒரு வேலையும், என் அரசாங்க வேலையை கிடைப்பதற்காக கூட சிலர் வைராக்கியமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வேலை கிடைப்பதற்குள் அவர்கள் படும் துன்பங்கள் கஷ்டங்கள் ஏராளம் அது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கின்ற வேலை கிடைக்க ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்
நீங்கள் வேலை தேடி எங்கு சென்றாலும் சரி, உங்கள் வேலை சம்பந்தமான விஷயங்களுக்காக வெளியே சென்றாலும் சரி. செல்வதற்கு முன்பாக இதை மட்டும் செய்து விடுங்கள் உங்கள் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கு வைத்து அதில் பாதி அளவில் சந்தனாதி தைலத்தை ஊற்றிக் கொண்டு, மீதி அதில் நல்லெண்ணையை ஊற்றி அதற்கு பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். பின் அதன் முன்பாக அமர்ந்து நீங்கள் வேலை தேடி போகும் இடத்தில் வேலை கிடைக்க வேண்டும். நான் வேலை விஷயமாக வெளியில் செல்லும் விஷயம் வெற்றி அடைய வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு விளக்கை குளிர வைத்து விடுங்கள். நம் வளக்கில் ஊற்றிய சந்தனாதி தைலம் நாம் நினைத்த காரியம் வெற்றி அடைய செய்யும் சக்தி வாய்ந்த தைலம்.
அதன் பிறகு நீங்கள் வேலை
விஷயமாகவோ அல்லது வேலை தேடியும் வெளியே செல்வதற்கு முன்பாக இதையும் கண்டிப்பாக செய்து விடுங்கள். ஆம் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்து விடுங்கள். ஒரு சிலருக்கு ஏலக்காய் சாப்பிட பிடிக்காது அவர்களுக்கு அது சேரவும் சேராது அவர்கள் ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்து விடுங்கள். நீங்கள் இதை செய்துவிட்டு எந்த வேலைக்காக வெளியே சென்றாலும் சரி அந்த வேலை நிச்சயமாக உங்களுக்கு வெற்றியில் தான் முடியும் அந்த சக்தி ஏலக்காய்க்கு உண்டு.இப்படி உங்கள் வீட்டில் இருந்த கிளம்பும் முன்பு இதையெல்லாம் மறக்காமல் செய்த நீங்கள் வேலைக்கு செல்லும் வழியில் இன்னொரு விஷயத்தையும் செய்து விடுங்கள் உங்கள் வேலை விஷயமாக எங்கு வெளியில் சென்றாலும் செல்வதற்கு முன்பாக உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அங்கு ஒரு தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு பின்பு நீங்கள் உங்கள் வேலை விஷயமாக அல்லது வேலை தேடி செல்லும் இடத்திற்கு செல்லும் போது. நீங்கள் செய்த ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு தைரியத்தையும் ஒரு தனி தன்னம்பிக்கையும் கொடுத்து விடும். இதனால் உங்களை சுற்றி எப்போதும் நேர்மறையான ஆற்றல்களை நிரம்பி இருக்கும் போது நீங்கள் கையில் எடுத்த காரியம் வெற்றி தான்.
நான் மேலே சொன்ன இந்த பரிகாரங்களை எல்லாம் நீங்கள் சரியாக செய்து விட்டு அதனுடன் உங்களுக்கு வேலை கிடைப்பதற்காக நீங்கள் செய்யும் எல்லாம் விதமான முயற்சிகளும் வெற்றி தான் கிடைக்கும். ஏன் நல்ல வேலையில் சம்பளம் கிடைக்கும், நீண்ட நாட்களாக அரசாங்க வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கூட அரசாங்க வேலைகள் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஆத்மார்த்தமாக சந்தோஷமாக செய்யும் போது அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அதனால் இந்த பரிகாரத்தையும் முழு நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனை கிடைக்கும்.
அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…
மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…