மனித வாழ்க்கையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கும் பல சாஸ்திரங்கள் நம்மிடையே உள்ளன.நாம் அனைவரின் இல்லத்திற்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் தேடிவருவதற்கு சில செடிகளை வளர்ப்பது நல்லது என்று நமது முன்னோர்கள் கூறி இருக்கின்றார்கள். அப்படி நமது இல்லத்திற்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய தாவர வகைகளில் இந்த செம்பருத்தி செடியும் ஒன்று.
சிவப்பு செம்பருத்தி தெய்வீகத்துடன் தொடர்புடையது, ஏனெனில் இது காளி தேவி மற்றும் விநாயகப் பெருமானுக்கு வழங்கப்படுகிறது. நேர்மறை ஆற்றல் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்காக, இந்த வாஸ்து செடிகளை வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம். செம்பருத்தி ஒருவரின் உற்சாகத்தை உயர்த்துவதற்கும், உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்கும் ஏற்றது, இதனால் இந்தியாவில் வீட்டிற்கு அதிர்ஷ்ட தாவரங்களாக கருதப்படுகிறது.
பொதுவாக தனி வீடு என்றால் முன்வாசல் மற்றும் பின்வாசல் என்று இரண்டு வாசல்கள் இருக்கும். அப்படி இல்லாமல் முன்வாசல் மட்டும்தான் இருக்கின்ற வீடுகளும் உள்ளது. உதாரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள்.அதுபோல் இல்லாமல் நமது வீடுகளில் முன்வாசல் மற்றும் பின்வாசல் என்று இரண்டு வாசல்களும் உள்ளது என்றால் வீட்டின் முன்வாசலில் வளர்க்கவேண்டிய முக்கியமான செடிகளில் செம்பருத்தி செடியும் ஒன்று ஆகும். இதனை முன்வசலில் வளர்பதால் நமது இல்லத்தை தேடிவருகின்ற பிரச்சனைகள், கண்திருஷ்டி போன்றவற்றை தடுத்துவிடும்.
வாஸ்துப்படி, செம்பருத்தி செடியை உங்கள் வீட்டின் அல்லது முற்றத்தின் வடகிழக்கு புறத்தில் நடுவது மிகவும் விசேஷமானது. வீட்டில்
வளர்க்கக்கூடிய செம்பருத்தி செடியில் எந்த அளவுக்கு பூக்கள் பூத்துக்குலுங்குதோ அந்த அளவுக்கு நமது இல்லத்தில் சந்தோஷங்களும், அதிர்ஷ்டமும் நிறைந்து காணப்படும். இதனை தென்மேற்கு திசையில் வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது எதிர்மறை ஆற்றலை அதிகம் ஈர்க்கும்.நிதி நெருக்கடியால் சிரமப்பட்டு, நிறைய முயற்சி செய்தும் உங்கள் நிதி நிலை மேம்படவில்லை என்றால், கண்டிப்பாக செம்பருத்தி பூ செடியை வீட்டில் நட்டு வைக்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயமாக மகா லட்சுமியின் அருள் கிடைக்கும். செம்பருத்தி பூ பல வண்ணங்களில் இருக்கும். ஆனால் சிவப்பு செம்பருத்தி மலர்தான் நிதி பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று, வீட்டிற்கு அருகிலுள்ள மகா லட்சுமி கோவிலுக்குச் சென்று, நம் வீட்டில் பூத்த சிவப்பு செம்பருத்திப் பூவைக் கொண்டு அர்ச்சனை செய்தால் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் நமக்குக் கிடைக்கும்.
வீட்டு தோட்டத்தில் பூத்த செம்பருத்தி பூவை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து, உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட வேண்டுதலை வைத்து வழிபட்டு வாருங்கள், அதன் பின்பு உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…
பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…
ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…
பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…
அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…