என்னதான் நாம் தங்கம் வாங்கி சேர்த்து வைத்தாலும் தங்கத்தின் மீது இருக்கும் மோகம் குறைவதே இல்லை. எவ்வளவு தங்கம் இருந்தாலும் மீண்டும் மீண்டும் அதனை வாங்கி சேர்த்துக் கொண்டே தான் செல்வோமே தவிர குறைப்பது இல்லை. பணம் இருப்பவர்கள் எப்படியாவது தங்கத்தை வாங்கி சேர்த்துக் கொள்வார்கள், ஆனால் இல்லாதவர்களும் கூட தங்கத்தை வாங்கி சேர்த்துக் கொள்வதற்கான இந்த பரிகாரத்தை இப்பதிவியல் பார்க்கலாம்.
இந்த பரிகாரத்தை நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையானது ஒரு சிறிய கடுகளவு தங்கமாவது அவசியம் இருக்க வேண்டும். ஒரு பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம்பு ஒரு ஏலக்காய் கொஞ்சம் சோம்பு, பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம் என அனைத்தையும் வைத்து சிறிய மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள்.
அதேபோல் உங்களிடம் இருக்கும் தங்க நகையை எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் பூஜை அறையில் வைத்து இந்த தங்கம் எனக்கு பல மடங்காக பெருக வேண்டும் என்று மனதார வேண்டி, பின் சிறிது வாசனை திரவியத்தை தெளித்து அல்லது சந்தன திரவியத்தை தெளித்து கொள்ளுங்கள். இந்த சந்தன திரவியத்திற்கு நகையை நம்மிடம் ஈர்த்துக் கொண்டு வரும் தன்மை வாய்ந்தது.
திரவியத்தில் சந்தன மணம் தான் வரவேண்டும், அதுதான் மிகவும் முக்கியமானது. பின்னர் நாம் கட்டி வைத்துள்ள இந்த முடிச்சை
பீரோவில் தங்கத்துடன் சேர்த்து எடுத்து வைத்து விடுங்கள். ஒரு மாதத்திற்கு பின் அந்த முடிச்சை அவிழ்த்து அதில் உள்ள பொருள்களை மாற்றி விடுங்கள்.தங்க நகை அதிகமாக சேர வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அவர்களின் அனுகிரகம்
நமக்கு முழுவதுமாக கிடைக்க வேண்டுமானால், அவர்களுக்கு பிடித்த அவர்கள் வசியமாக கூடிய வாசனை அந்த இடத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் தாயார் மனம் குளிர்ந்து விருப்பப்பட்டு அங்கு இருப்பார். அப்படியான ஒரு பரிகாரம் தான் இது.இந்த பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்து வருவதனால் நகை வாங்க முடியாதவர்கள், நகை அடிக்கடி அடகு கடைக்கு சென்று வருவது அல்லது நகை அணிய கூடிய யோகமே இல்லாதவர்களுக்கு கூட இந்த நிலை மாறி நகை வாங்கும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. நகையை அதிகமாக சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களும் தன்னிடம் ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லையே என்று வருத்தப்படுபவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்யும் போது மேலும் மேலும் நகை பெறுவதற்கான வாய்ப்பை பெறலாம்.
அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…
மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…
கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…
பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…
இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள் இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…