இந்த உலகில் ஒரு உயிர் பிறந்து அதே உயிர் இறந்து போகும் வரை அதற்கு தேவையானது என்று ஒன்று இருந்தால் அது பணம் மட்டுமாகவே இருக்கும். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஒரு உயிர் பிறப்பதற்கு கூட மருத்துவமனைகளில் சில சமயம் லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அந்த உயிர் இறக்கு தருவாயில் இருக்கும் போது. அதே உயிர் இறந்த பின்னும் அதற்காக பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி மனிதனின் வாழ்வின் ஒரு அங்கமாகவே தற்போது பணம் என்பது மாறிவிட்டது அப்படி மனிதனின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் இந்த பணம், செல்வம், சொத்து சுகங்களை எப்படி நம் வீட்டிற்கு உடனடியாக கொண்டு வருவது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
திதி நித்யா தேவிகளில் ஒருவரான பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா தேவிக்கு நாம் உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடுகள், பூஜைகள் செய்து வருவதன் மூலம் உங்களின் வீட்டுக்கு தேவையான அளவு செல்வங்களையும் அதிர்ஷ்டத்தையும் உடனடியாக உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதனை பார்க்கலாம் வாருங்கள். நித்திய தேவிகளில்
15 ஆம் நித்திய தேவியான சித்ரா தேவி பளபளவெ என மின்னும் மேனி உடையவள். சித்ரா தேவி பல்வேறு ரத்தினங்கள் இருக்கும் மகுடத்தை தான் சூடி இருப்பாள்.மேலும் தேவி வெண்பட்டாடை
உடுத்தி தன் உடல் முழுவதும் பல வகையான தங்கம், வைரம் மற்றும் ரத்தினங்கள் போன்ற ஆபரணங்களை அணிந்து அழகின் முழு உருவமாக காட்சி தருபவர். மேலும் வரதம், வாசம், அங்குசம் அபயம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட சித்ரா தேவியை தினசரி பூஜை செய்து வழிபட்டு வரும் அவளின் பக்தர்களின் பயத்தை நீக்கி அவர்களுக்கு தேவையான அதிர்ஷ்டம் செல்வங்களையும் உடனடியாக தரும் சக்தி கொண்டவள்.ஆகையால் சித்ராதேவியை வேண்டி “ஒம் விசித்ராயை வித்மஹே மஹா நித்யாயை தீமஹி தன்னோ தேவிப்ரசோதயாத்” என்ற மந்திரத்தை தினசரி அல்லது பௌர்ணமி, கிருஷ்ணபட்ச பிரதமை போன்ற நாட்களில் வழிபட்டு வந்தால் உங்களுக்கு தேவையான திடீர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வத்தையும் தாய் உங்களுக்கு அருள்வாள்.
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…