அவசர பண தேவையை பூர்த்தி செய்யக்கூடிய மந்திரம்!!
எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்களுக்கு பண பிரச்சனை சில சமயங்களில் வரத்தான் செய்யும். அந்த சமயத்தில் ஏதோ ஒரு அவசர தேவைக்காக பணத்தை பிரட்ட முடியாத சூழல் கூட ஏற்படும். யாராக இருந்தாலும் அவசர தேவைக்கு பணத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும். சில இக்கட்டான சூ
எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்களுக்கு பண பிரச்சனை சில சமயங்களில் வரத்தான் செய்யும். அந்த சமயத்தில் ஏதோ ஒரு அவசர தேவைக்காக பணத்தை பிரட்ட முடியாத சூழல் கூட ஏற்படும். யாராக இருந்தாலும் அவசர தேவைக்கு பணத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும். சில இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை புரட்டுவதற்கு முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்போம். அப்பொழுது எந்த தாமதமும் இல்லாமல் உங்களுடைய முயற்சிகளோடு சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்தால் உங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் வந்து சேரும் ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக அதற்கான பலன் கிடைக்கும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் மந்திரம்
அவசர பணத்தை வைக்காக ஓடிக் கொண்டிருக்கும்போது மற்றவர்களிடம் நாம் பணம் கேட்போம். அதோடு சேர்த்து இந்த இரண்டு எழுத்து மந்திர வார்த்தை யான “ஸ்ரீம்” என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும் இது மகாலட்சுமி தேவியார் கூறிய மந்திரம் நாம் பிறந்த தேதிக்கும் வாழக்கூடிய வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது. பிறந்த நாளை வைத்து ஜாதகம் கணிக்கப்படும் பிறந்த நாளை வைத்து நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கப்படும் பிறந்த தேதி எதுவோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.
பிரபஞ்சத்திடம் வேண்டுதல்
ஒரு வெள்ளை நிற காகிதத்தில் இந்த மந்திரத்தை எழுதி நீங்கள் எந்த தேதியில் பிறந்தீர்களோ அதனை அத்தனை முறை எழுத வேண்டும். உதாரணமாக 15-ம் தேதி என்றால் 15 முறை நீங்கள் பிறந்த தேதியை ஸ்ரீம் என்ற வார்த்தையோடு சேர்த்து எழுத வேண்டும். பிறகு அந்த பேப்பரை மடித்து கையில் வைத்துக்கொண்டு பிரபஞ்சத்திடம் உங்களுக்கு தேவையான பணத்தை கேட்க வேண்டும். பிறகு உங்களுக்கு தேவையான பணம் நிச்சயமாக கிடைக்கும் அந்த பேப்பரை மடித்து பூஜை அறைகள் மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பணம் உங்கள் கைக்கு வந்தவுடன் மந்திரம் எழுதி வைத்திருக்கும் பேப்பர் கொஞ்சம் பழையதான பிறகு அதனை அப்புறப்படுத்தி விடலாம். இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் மூன்று மாதத்தில் உங்கள் குழந்தைக்கு பீஸ் கட்ட வேண்டும் என்றால் அந்த பணம் கிடைக்க வேண்டும் என்று மூன்று மாதத்திற்கு முன்பாகவே நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம் மற்ற எந்த பிரச்சனைக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டாலும் நீங்கள் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் அதிகமாக சேர வாஸ்து பரிகாரம்!!