Advertisement
உடல்நலம்

மன அழுத்தம் போக்கி நல்ல உறக்கம் தரும் சாதரணமாக கிடைக்கும் அற்புத மூலிகை!

Advertisement

`மதுர… மரிக்கொழுந்து வாசம்…’ -இப்படியொரு திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பாடலுக்கேற்ற மாதிரி மதுரை மரிக்கொழுந்துக்கென்று சிறப்பு உண்டு. முன்பெல்லாம் பூக்கடைகளில் மரிக்கொழுந்து மாலை என்று கேட்டால் கிடைக்கும். இன்றைக்கு பூக்களின் நடுவே மரிக்கொழுந்து இலைகளை வைத்துக் கட்டிக் கொடுக்கிறார்கள். 10, 15 ரூபாய்க்கு மரிக்கொழுந்து கட்டு கேட்டாலும் கிடைக்கிறது. பூக்கள்கூட இரண்டொரு நாட்களில் அதன் நறுமணத்தை இழந்துவிடும். ஆனால், மரிக்கொழுந்தின் இலைகள் வாடிப்போனாலும்கூட அதன் நறுமணம் மாதக்கணக்கில் வீசிக்கொண்டிருக்கும். நறுமணம் வீசும் மரிக்கொழுந்து இலைகளுக்கு மருத்துவ குணம் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கட்டுரையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மன அமைதி, நிம்மதியான உறக்கம்

மெல்லிய நறுமணம் வீசும் மரிக்கொழுந்து அடிப்படையில் மனதை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கக்கூடியது. அந்தவகையில் மன அழுத்தம், மன உளைச்சல் மற்றும் மனம், உடல்நல பாதிப்புகளால் ஏற்படக்கூடிய தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு மரிக்கொழுந்து சிறப்பான பலனளிக்கும். ஒரு கொத்து மரிக்கொழுந்து இலையை அதன் தண்டுடன் சேர்த்து தலையணையின் அடியில் வைத்தாலே போதும், தூக்கம் கண்களைத் தழுவும். ஒருதடவை வைத்த மரிக்கொழுந்து இலையை இரண்டு மூன்று நாள்கள் கழித்து எடுத்துவிட்டு மீண்டும் புதிய மரிக்கொழுந்தை வைத்து தூங்கினால் நிம்மதியான உறக்கம் வரும்.

Advertisement

உடல் வலி, உடல் அசதி

மரிக்கொழுந்து இலையை சில தைலங்களுடன் சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்துக்குளித்து பல்வேறு நோய்களைப் போக்க முடியும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. உடல் வலி மற்றும் உடல் அசதி விலக மரிக்கொழுந்து இலைகளை எண்ணெயில் காய்ச்சிக் குளிக்க சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு மரிக்கொழுந்து இலைக்கு மலேரியா காய்ச்சலைக் குணப்படுத்தும் சக்தி இருப்பது தெரியவந்ததால் அதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

வயிறுவலி, சிறுநீர் எரிச்சல்

மரிக்கொழுந்தின் மருத்துவ குணம் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில் வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி மற்றும் எரிச்சல், வயிற்றுக்கடுப்பு போன்றவற்றைக் குணப்படுத்த மரிக்கொழுந்து பயன்படுவதாகக் கண்டறியப்பட்டது. அரைத்து எடுத்த மரிக்கொழுந்து இலை விழுது ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மில்லி நீரில் போட்டு அரை மணி நேரம் ஊற விட வேண்டும். அதன்பிறகு அதை வடிகட்டி மரிக்கொழுந்தின் தெளிந்த நீரை மட்டும் குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் சரியாகின்றன.

சொரியாசிஸ்
Advertisement

தோல் அரிப்பு, தடிப்பு உள்ளிட்ட தோல் நோய்களுக்கும்கூட மரிக்கொழுந்து இலையை அரைத்து நீரில் கலந்து ஊற விட்டு தெளிந்த நீரைக் குடிப்பதுடன் பிரச்சினை உள்ள இடங்களில் பூசிவந்தால் பலன் கிடைக்கிறது. சொரியாசிஸ் எனப்படும் ஆபத்தான, மிகவும் தொல்லை கொடுக்கும் தோல் நோய் கூட மரிக்கொழுந்து மருத்துவத்தில் குணமாகிறது. சொரியாசிஸ் நோய்க்கு எத்தனையோ சிகிச்சைகள் எடுத்தும் குணமாகாத சூழலில் மரிக்கொழுந்தில் பலன் கிடைக்குமா என்று

Advertisement
நீங்கள் கேட்கலாம். மிகச்சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

மூட்டு வலி, வீக்கம்

மூட்டு வலி உள்ளவர்கள் மரிக்கொழுந்து இலைகளை மேல் பூச்சாகப் பூசினால் குணம் கிடைக்கும். வீக்கம் மற்றும் வலிகளைப் போக்கவும் இதனை அரைத்து பற்று போடலாம். உடலுக்கு கேடு விளைவிக்கும் கிருமிகளை அழிப்பதில் மரிக்கொழுந்தின் பங்கு அளப்பரியது. பூஞ்சைத்தொற்றுகளைப் போக்கவும் உதவுகிறது. தலைவலிக்குக்கூட மரிக்கொழுந்து நல்மருந்தாகிறது. வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி விழுதாக அரைத்து எடுத்த மரிக்கொழுந்தை சிறிது சுக்குத்தூள் சேர்த்து நெற்றியில் பற்று போட்டால் போதும், தலைவலி சரியாகும். மரிக்கொழுந்தை நீர் விட்டு கசாயமாக்கி அருந்திவந்தால் உடலில் சேர்ந்துள்ள நச்சுகள் விலகும். இந்த மரிக்கொழுந்து கசாயத்தை தொடர்ந்து அருந்தி வந்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.

செம்பட்டை தலைமுடி

மற்றபடி நோய் ஏதாவது பாதித்தால் அதற்கு சிகிச்சை எடுக்கும்போது முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் சிலர் இளம்வயதிலேயே வயது முதிர்ந்தவர்களைப்போன்று காணப்படுவார்கள். குறிப்பாக தலைமுடி நரைத்தும், செம்பட்டையாகவும் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் மரிக்கொழுந்து இலையுடன் நிலாவரை இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்க்க வேண்டும். குறிப்பாக மயிர்க்கால்களில் படுமாறு தடவி மசாஜ் செய்வதுபோல மென்மையாக செய்து சிறிதுநேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தலைமுடியின் நிறம் மாறும். ஒரேநாளில் மாற்றம் கிடைத்துவிடாது. வாரம் ஒருமுறை என செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

Advertisement
Maria Bellsin

Recent Posts

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

3 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

5 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

7 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

10 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

19 மணி நேரங்கள் ago