உங்கள் வீட்டில் இருக்கும் செல்வங்களை மென்மேலும் பெருக்குவதற்காகவும் அல்லது உங்கள் வீட்டில் இல்லாத செல்வத்தை கொண்டு வந்து அதை மென்மேலும் பெருக்குவதற்காக முதலில் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். அதனால் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிரம்பி வழிவதற்கு சில வாஸ்து சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்தாலே போதும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகி உங்கள் வீட்டில் உள்ள செல்வம் மேன்மேலும் பெருகும். அதனால் உங்கள் வீட்டில் உள்ள செல்வம் பெருகி பணத்தட்டுப்பாடு வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
உங்கள் வீட்டு அறையில் உள்ள மூலைகளில் ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் உப்பை நிரப்பி வைத்து விடுங்கள். இந்த உப்பு உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை ஈர்த்துக் கொள்ளும். இதனால் உங்கள் வீட்டின் செல்வ வலம் அதிகரிக்கும்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் உங்கள் பூஜை அறையில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து பூஜை செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வையுங்கள். வாராவாரம் ஒரு எலுமிச்சை பழத்தை மாற்றிக் கொண்டே வாருங்கள். இதனால் உங்கள் மீதும் உங்கள் வீட்டின் மீதும் இருக்கும் கண்திருஷ்டி விலகி உங்கள் வீட்டில் செல்வங்கள் பெருகும்.
நீங்கள் உங்கள் வீட்டின் வெளியே உங்கள் பெயர் எழுதப்பட்ட பெயர் பலகை வைக்கும்போது. அதை பார்ப்பவர்கள் இது இன்னாருடைய வீடு என்பதை உணரும் போது அது நேர்மறை ஆற்றலாக உருவெடுத்து உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கி செல்வங்களை பெருக்கும்.
உங்கள் வீட்டின் சமையலறையில் சமையல் பொருட்களை தவிர வேற எந்த பொருட்களையும் வைத்து பயன்படுத்தக்
கூடாது. முக்கியமாக உங்களை நான் உடல் நலத்தை மேம்படுத்துவதற்காக வைத்திருக்கும் மருந்து மற்றும் மாத்திரை பொருட்களை வைத்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டின் படுக்கை அறையில் கண்ணாடியை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின் படி தவறாகும். அப்படி படுக்கை அறையில் கண்ணாடி வைத்தால் உங்கள் வீட்டில் ஒரே குடும்ப பிரச்சினை, சண்டை சச்சரவுகளாக இருக்கும்.
இந்து புராணத்தின் படி புனித நதியாக கருதப்படும் கங்கையின் நீர் அடங்கிய கலசத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்தால். அது உங்கள் வீட்டிற்கு மங்களத்தை சேர்க்கும். அதன் மூலம் உங்கள் வீட்டில் உள்ள பணம் செல்வங்கள் பெருகும்.
உங்கள் வீட்டிலும் அல்லது பூஜை அறையிலும் சுவஸ்த்தி, ஓம் போன்ற சின்னங்களை வைத்து வழிபடுவது உங்கள் வீட்டிற்கு மங்களத்தை கொண்டு வந்து சேர்க்கும். இதனால் உங்கள் வீட்டில் உள்ள செல்வம் வளம் பெருகிகொண்டே இருக்கும்.
உங்களின் வீட்டின் முன்பும் உங்கள் வீட்டு பூஜை அறையிலும் தினசரி காலை, மாலை என இருவேளையும் விளக்கேற்றி வைப்பதன் மூலம் உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இதனால் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வங்கள் பெருகிகொண்டே இருக்கும்.
பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…
மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…
ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…
பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…