விளக்கெண்ணெய்… சில பேருக்கு ஆமணக்கெண்ணெய்னு சொன்னாதான் தெரியும். பலபேர் விளக்கு எரிக்கக்கூடிய எண்ணெயான்னு கேப்பாங்க. ஆமணக்கு விதையில இருந்து எடுக்கக்கூடிய விளக்கெண்ணெய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. சில பேரை கிண்டல் பண்றதுக்கு விளக்கெண்ணெய்னு சொல்வாங்க. ஆனா விளக்கெண்ணெயோட மருத்துவ குணம் பற்றி தெரிஞ்சா இனிமே யாரும் அந்த மாதிரி கிண்டல் பண்ண மாட்டாங்க. பிசுபிசுப்புத் தன்மை அதிகம் உள்ள இந்த ஆமணக்கு எண்ணெய் சொல்லக்கூடிய விளக்கெண்ணெய் அடர்த்தி அதிகமா இருக்கும், குளிர்ச்சித்தன்மை உள்ளது.
விளக்கெண்ணையை தினமும் இரண்டு மூன்று சொட்டு விளக்கெண்ணெயை தொப்புள்ள வச்சு மசாஜ் பண்ணிட்டு வந்தா முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி பிரச்சினை எல்லாம் சரியாகும். அது மட்டுமில்ல தொப்புள்ள எண்ணெய் வைக்கிறதால கண் பார்வை தெளிவடையும். இன்னைக்கு சூழல்ல பலபேர் மணிக்கணக்குல கம்ப்யூட்டர் முன்னாடிதான் இருக்காங்க. அதேமாதிரி வயசு வித்தியாசமில்லாம எல்லோருமே மணிக்கணக்குல மொபைல் பார்க்கிறாங்க. இதனால கண்ணுல வறட்சி உண்டாகி பல நோய்கள் வர வாய்ப்பு இருக்கு. அதுக்கெல்லாம் இந்த விளக்கெண்ணெய் வைத்தியம் பயனுள்ளதா இருக்கும்.
கிராமப்புறங்கள்ல இன்னைக்கும் வயிறு சுத்தம் பண்றதுக்கு விளக்கெண்ணெயைத்தான் பயன்படுத்துறாங்க. அதாவது பேதி மருந்தா இதை பயன்படுத்துறாங்க. இதை எப்படி சாப்பிடணுன்னா காலையில சூடான டீ இல்லன்னா காபியில ஆளைப்பொறுத்து ஒரு ஸ்பூன் இல்லன்னா
அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குடிச்சா மலம் இளகி தாராளமா வெளியேறும். இன்னைக்கி பல பேர் மலச்சிக்கல் பிரச்சினையால அவதிப்பட்டுட்டு இருக்காங்க. அதுக்கு விளக்கெண்ணெய் நல்ல மருந்து.விளக்கெண்ணெய் மலச்சிக்கல் பிரச்சினையை மட்டும் சரிபண்ணக்கூடியதுன்னு நினைக்காதீங்க. வயிறு சம்பந்தமான மற்ற
சில பிரச்சினைகளையும் சரி பண்ணும். வாய்வுத் தொல்லையை விரட்டும். வயிற்றுப்புண்ணை சரி பண்ணும். வயிற்றுல உள்ள கசடுகளை அதாவது தேங்கி இருக்கிற அழுக்குகளை நீக்கும்; வயிற்றுப்பூச்சிகளை வெளியேத்தும். இந்த மாதிரி விளக்கெண்ணெயோட மகிமையை சொல்லிக்கிட்டே போகலாம்.கால்ல பித்த வெடிப்பு வந்தா அதுக்கு என்ன சிகிச்சை பண்ணலாம்னு பலபேர் தேடிட்டு இருப்பாங்க. அதுக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி அதோட மஞ்சள்தூள் சேர்த்து தடவுனா சரியாகும். மூக்கடைப்பு, சளித்தொல்லை, தலைவலியால அவதிப்படுறவங்க விரலி மஞ்சளை விளக்கெண்ணெய்ல நனைச்சி தீயில எரிச்சி அதுல இருந்து வரக்கூடிய புகையை சுவாசிச்சா பிரச்சினை சரியாயிரும். குழந்தை பெத்த தாய்மார் சில நேரங்கள்ல குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காம சிரமப்படுவாங்க. அந்தமாதிரி நேரங்கள்ல தாய்மார் தங்களோட மார்பகத்துல விளக்கெண்ணெயை தேய்ச்சி விட்டா தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…
வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…
அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…
சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…
டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…
தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…