Advertisement
ஆன்மிகம்

உங்களுக்கு பண கஷ்டமே வராமல் இருக்க வேண்டுமா ? ஒரே ஒரு ரூபாய் நோட்டில் இந்த பொருட்களை சேர்த்து மடித்து வையுங்கள்!

Advertisement

இன்றைய நாட்களில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட நம்மால் சேமிக்க முடியவில்லை. ஆம் ஒரு சிலர் கையில் பணம் என்பதே சேர்வது கிடையாது. அவர்கள் வாங்கும் வருமானம் 15,000 ஆக இருந்தால் அவர்கள் குடும்பச் செலவு 20,000 25,000 ஆக இருக்கும். இப்படி அவர்களுக்கு வரும் வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும் போது அவர்களால் எப்படி சேமிக்க முடியும். அதனால் இந்த பிரச்சனை தீருவதற்காக நம்முடைய குலதெய்வத்தை வேண்டி ஒரு சிறிய தாந்த்ரீக பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகிறோம் மிகவும் எளிமையான பரிகாரம் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பணம் பெருக பரிகாரம்

இந்த எளிமையான தாந்திரீக பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் பணம் 3 மடங்காக பெருகும் அதாவது இன்று 10 ஆயிரம் சம்பளம் வாங்கும் நீங்கள் நாளை 30 ஆயிரம் 40 ஆயிரம் கூட சம்பளம் வாங்கும் நிலை ஏற்படும். இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு உங்கள் வீட்டில் உள்ள 10 ரூபாய் நோட்டிலிருந்து 2000 ரூபாய் நோட்டு வரை எந்த நோட்டு இருக்கிறதோ அதிலிருந்து ஒரு நோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் எடுத்துக் கொண்ட அந்த ரூபாய் நோட்டு வைத்து அதில் பச்சைக் கற்பூரம் சிறிய துண்டு ஒன்று, மூன்று ஏலக்காய் மற்றம் ஒரு ஸ்பூன் நெல் இந்த மூன்று பொருட்களையும் வைத்து மடித்துக் கொள்ளுங்கள். பின் நாம் மடித்த ரூபாயை நோட்டை ஒரு தட்டில் வைத்து உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் காலடியில் வைத்து விடுங்கள்.

Advertisement

பூஜை அறையில் அமர்ந்து

பின் வழக்கம்போல் உங்கள் பூஜை அறையை பூஜை செய்வது போல் தயார் செய்து பின் சாம்பிராணி தூபம் போட்டு அனைத்தையும் தயார் செய்து கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் உங்கள் வருமானம் உயர வேண்டும் என உங்கள் குல தெய்வத்தை மனதார நினைத்து மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

மல்லிகை பூ அர்ச்சனை

அதன் பின்பு நீங்கள் மகாலட்சுமி தாயாரின் பாதங்களுக்கு கீழ் நாம் நாம் மடித்து வைத்திருக்கும் ரூபாய் நோட்டிற்கு மல்லிகை பூவை

Advertisement
கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். நீங்கள் மல்லிகை பூ சீசனில் வெறும் ஒரு 20 ரூபாய்க்கு வாங்கி கூட இந்த பரிகாரத்தை செய்து விடலாம். நீங்கள் அப்படி மல்லிகை பூவை எடுத்து அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொரு முறையும் “ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி” என்று மந்திரத்தை 108 முறை சொல்லி அந்த ரூபாய்க்கு தாளுக்கு மல்லிகை பூவை வைத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

பணம் வைக்கும் இடத்தில்
Advertisement

நீங்கள் பூ வைத்து அர்ச்சனையை முடித்தவுடன் கடைசியாக மகாலட்சுமி தாயார் பாதங்களில் இருக்கும் ருபாய் தாளுக்கும் சேர்த்தவாறு கற்பூர ஆராதனை காண்பித்து உங்களின் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பின் தாயாரின் பாதங்களுக்கு கீழ் வைத்திருக்கும் ரூபாய் தாளை எடுத்து அதன் உள்ளே நாம் வைத்திருக்கும் பொருட்களை ஒரு தட்டில் வைத்து அந்த தட்டுடன் நம் வீட்டில் பணம் வைத்து எடுக்கும் இடத்தில் அல்லது பீரோவில் பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். மேலும் நாம் பூஜைக்கு பயன்படுத்திய அந்த ரூபாய் தலை எக்காரணம் கொண்டும் செலவு செய்யக்கூடாது அதையும் உங்கள் பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

செய்ய வேண்டிய நாள்

அதன் பின்பு மூன்று மாதம் கழித்து நீங்கள் பூஜை செய்து வைத்திருக்கும் அந்த நோட்டை செலவு செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். மீதம் நாம் தட்டில் வைத்து வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் மனிதனின் காலடி படாத இடங்களில் போட்டுவிட்டு மீண்டும் புதியதாக ரூபாய் தாளை வைத்து அதில் பொருள்களை போட்டு மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்து மீண்டும் பீரோவுக்குள் வைத்து விடலாம். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய ஆரம்பித்து சிறிது நாட்களிலே அதனுடைய பலனை நீங்கள் உணர தொடங்குகிறீர்கள் இந்த பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை செய்யலாம் வெள்ளிக்கிழமை செய்ய முடியாதவர்கள். பௌர்ணமி அன்று வீட்டில் மாலை விளக்கேற்றிய பின் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நம்பிக்கையுடன் இதை செய்து வாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

16 நிமிடங்கள் ago

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

3 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

13 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

14 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

16 மணி நேரங்கள் ago