இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய வேண்டும் என்பார்கள். லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்தால் தான் வீட்டில் உள்ள பண பிரச்சினைகள் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்கும். இந்த உலகில் பணம் ஒன்று தான் அனைத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. பணம் சம்பாதிக்கவும் வீட்டில் பணத்தை சேமிக்கவும் நாம் தெய்வத்தை முழு மனதோடு வேண்டிக் கொள்வோம்.
வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்யவில்லை என்றால் பணமும் வீட்டில் தாங்காது அப்படி வீட்டில் பணம் தங்கவில்லை என்றால் அதற்காக நிறைய காசு செலவழித்து பரிகாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை எளிமையான ஒரு பரிகாரத்தை வீட்டில் தொடர்ந்து செய்து வந்தால் போதும் நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு வீட்டில் உள்ள பொருள் மட்டுமே போதுமானது வீட்டில் நிலை வாசலில் வாசல் கதவின் இரு புறங்களிலும் மஞ்சள் தூளை தூவ வேண்டும். பொதுவாக மஞ்சள் குங்குமம் இரண்டும் அம்மனுக்கு மிகவும் பிடித்தமானவைகள் எனவே மஞ்சளை நாம் வீட்டு வாசலில் தூவி வைக்கும் பொழுது அந்த
வாசனைக்காகவே லட்சுமிதேவி நம் வீட்டிற்கு வாசம் செய்வாள். மஞ்சள் பொடியை மட்டுமே வாசல் கொட்ட வேண்டும் அதிகமாக மஞ்சள் உங்கள் வீட்டின் முன் இருந்தால் அதனை எடுத்து குப்பையில் ஒருபோதும் போடக்கூடாது அதனை செடிகளுக்கு மேல் தூவி விட வேண்டும். காலை எழுந்ததும் குளித்து விட்டு தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுடைய பொருளாதார நிலை உயர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.இதனையும் படியுங்கள் : பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமா! இந்த ஒரே ஒரு தீபம் போதும்!
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…
பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…