இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் தோசை சுடும் போது அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய பன்னீர் மசால் தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்
இது போன்று ஒரு பன்னீர் மசால் தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் ஒரு தோசை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு வாய்க்கு ருசியாக இருக்கும் குறிப்பாக குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சுவையான பன்னீர் மசால் தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பன்னீர் மசால் தோசை | Paneer Masal Dosai Recipe in Tamil
இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய பன்னீர் மசால் தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் தோசை சுடுவதற்கு பதில்இது போன்று ஒரு பன்னீர் மசால் தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் ஒரு தோசை சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு வாய்க்கு ருசியாக இருக்கும் குறிப்பாக குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Dosai, தோசை
Prep Time 20 minutesmins
Cook Time 20 minutesmins
Total Time 40 minutesmins
Servings 5People
Calories 153
Equipment
1 கடாய்
1 தோசை கல்
Advertisement
1 பெரிய பவுள்
Ingredients
2மேசை கரண்டிஎண்ணெய்
½tbspகடுகு
2பெரிய வெங்காயம்பொடியாக நறுக்கியது
2பச்சை மிளகாய்பொடியாக நறுக்கியது
1கொத்துகருவேப்பிலை
2தக்காளிநறுக்கியது
¼tbspமஞ்சள் தூள்
½tbspகரம் மசாலா
½tbspமல்லி தூள்
1tbspமிளகாய் தூள்
உப்புதேவையான அளவு
150கிராம்துருவிய பன்னீர்
கொத்த மல்லிசிறிது
Instructions
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு கடுகு சேர்த்துக் கொள்ளவும் பின்பு கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு
Advertisement
வதக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்கு வதங்கி வந்தவுடன்.
இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு வெந்து மசிந்து வந்தவுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
பின்பு நாம் சேர்த்த மசாலாவின் பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கி விட்டு இதனுடன் நாம் துருவி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து நன்கு கிளறிவிட்டு ஒரு இரண்டு நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
பின் கடாயை கீழே இறக்கி தோசை கல்லை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். பின் தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவு எடுத்து தோசை அதிகம் விரித்து விடாமல் சற்று தடிமனாக ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின் நாம் தயார் செய்த பன்னீர் மசாலாவை தோசையில் சேர்த்து நன்கு பரப்பி தோசை கரண்டியை வைத்து அமுக்கி விடுங்கள் பின்பு தோசை வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் தோசை நன்றாக வெந்ததும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறாக மீதம் இருக்கும் பன்னீர் மசாலாவில் தோசை தயார் செய்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பன்னீர் மசாலா தோசை இனிதே தயாராகிவிட்டது