இன்று நாம் இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் வகையில் ஒரு கிரேவி ரெசிபி பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து கொடுத்தால்
மிகவும் விரும்பி சாப்பாடு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு சப்பாத்தி பூரி போன்றவற்றிற்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சூவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பஞ்சாபி பன்னீர் மசாலா | Punjabi Paneer Masala Recipe in Tamil
உங்களுக்கு வேகமாகவும் எளிமையாகவும் ஏதாவது கிரேவி செய்ய வேண்டும் என்று இருந்தால் அப்போது இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பஞ்சாபி பன்னீர் மசாலா செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பாடு விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு சப்பாத்தி பூரி போன்றவற்றிற்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Paneer, பன்னீர்
Prep Time 10 minutesmins
Cook Time 20 minutesmins
Total Time 30 minutesmins
Servings 5people
Calories 258
Equipment
1 கடாய்
1 மிக்ஸி
1 பெரிய பவுள்
Ingredients
மிக்ஸியில் அரைக்க
1பெரிய வெங்காயம்நறுக்கியது
1தக்காளிநறுக்கியது
10பல்பூண்டு
5பச்சை மிளகாய்
கொத்தமல்லிசிறிது
10முந்திரி பருப்பு
½பழம்எலுமிச்சை சாறு
தண்ணீர்சிறிது
கிரேவி செய்ய
2tbspவெண்ணெய்
½tspசோம்பு
½tspஒமம்
1tbspமிளகாய் தூள்
1tbspதனியா தூள்
½tspசீரக தூள்
½tspகரம மசாலா
தண்ணீர்தேவையான அளவு
உப்புதேவையான அளவு
கஸ்தூரி மேத்திசிறிது
பட்டர் துருவியதுசிறிது
Instructions
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், சிறிய கொத்தமல்லி, முந்திரிப்பருப்பு, எலுமிச்சை பழச்சாறு, சிறிது கல் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
அதன்
Advertisement
பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகி காய்ந்ததும் அதில் அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் ஒமம் சேர்த்து ஒரு ஐந்து வினாடிகள் நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு நாம் மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை கடாயில் சேர்த்து நன்கு வேக விடுங்கள். பின் விழுது ஓரளவு வெந்தவுடன் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் கரம் மசாலா தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின் கடாயை மூடி வைத்து மசாலா பொருட்கள் வேக வைத்து பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் 10 பன்னீர் துண்டுகளை சேர்த்து அதன் மேல் சிறிய கஸ்தூரி மேத்தி தூவி அதன் மேல் பட்டரை துருவிய சேர்த்து கொள்ளவும் .
பின் கடாயை மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்கவும். பின் ஐந்து நிமிடம் கழித்து சாப்பிட பரிமாறுங்கள். அவ்வளவு தான் சுவையான பஞ்சாபி பன்னீர் மசாலா இனிதே தயாராகிவிட்டது.
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…