உடல் ஆரோக்கியத்துக்கு காலை உணவு மிக மிக அவசியம். எந்த ஒரு காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க கூடாது. அதே போல் அந்த காலை உணவு எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவாக இருப்பதை காட்டிலும் தானியங்கள் மற்றும் இயற்கை உணவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் காலை நேரத்தில் இதுப்போன்ற ஆரோக்கியமான உணவை எடுத்து கொண்டால் அந்த நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கலாம்.
உடலுக்கு அதிகப்படியான சத்து கொடுக்கும் தானியங்களில் ராகிக்கு முதலிடம் உண்டு. ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதிகப்படியான தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலை உணவில் ராகியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் தமிழர்களின் சிறந்த காலை நேர உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளது ராகி அடை எனச் சொல்லப்படும் கேழ்வரகு அடை. இதில் இருக்கும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு காலை நேரத்தில் ராகியில் செய்த அடை, தோசை, உப்புமா ஆகியவற்றை கொடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ராகியில் முருங்கைக்கீரை சேர்த்து, அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் எல்லாம் அடை சுட்டு தருவார்கள். அதே சுவையில் மிருதுவான ராகி முருங்கைக் கீரை அடை எப்படி செய்வது என்பதை பற்றி தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…