Advertisement
ஆன்மிகம்

மீளவே முடியாத கடனில் இருந்து கூட மீள வீட்டின் நிலை வாசலில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Advertisement

கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். கடன் இல்லாத வாழ்வை யார் வாழ்கிறாரோ அவர்தான் பெரிய மனிதன் ஆகிறார். இவ்வுலகில் கடன் இல்லாத ஒருவரை கூட நம்மளால் பார்க்க முடியாது அந்த அளவுக்கு கடன் நம் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருக்கிறது.

நாம் என்னதான் அந்த கடனை அடைக்க பாடுபட்டு கொண்டு இருந்தாலும் நம்மளால் அது முடிவதில்லை அதற்கு தான் நம் முன்னோர்கள் பழங்காலத்தில் வீட்டு வாசப்படியில் ஒரு பரிகாரத்தை செய்வார்கள். அது என்ன பரிகாரம் என்பதனை பற்றியும் கடனை எப்படி அடைப்பது என்பதை பற்றியும் இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

Advertisement

கல் உப்பு

“கல் உப்பு” மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த பொருளாகும். யார் ஒருவர் வீட்டில் கல் உப்பு நிறைந்து இருக்கிறதோ அந்த வீட்டில் பண வரவு அதிகரித்து இருக்கின்ற கடன் படிப்படியாக குறைந்து பணம் சேருகின்ற சூழ்நிலை உருவாகும் என ஆன்மீக குறிப்பு கூறுகின்றது. ஆனால் நம்மில் பலரும் கல் உப்பை பயன்படுத்துகின்றது மிகவும் குறைவுதான்.

உப்பு வாங்குபவர்கள் வெள்ளிக்கிழமையில் “சுக்கிர ஹோரையில்” வாங்கி பீங்கான் ஜாடியில் நிரப்பி வையுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த உப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எப்பொழுது உப்பு தீர போகிறதோ, அப்பொழுது வெள்ளிக்கிழமையில் வாங்கினால் போதுமானது. உப்பு அதிகம் உடலில் சேர்ந்தால் ஆயுள் குறையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதே சமயம் தூள் உப்புக்கு பதிலாக கல் உப்பு பயன்படுத்தினால் நல்லது.

Advertisement

உப்பு பரிகாரம்

இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு கைப்பிடி உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு துண்டு வசம்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், பின்னர் ஒரு ரூபாய் நாணயத்தை ஒரு பேப்பரில் மடித்து இதனுடன் சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் சேர்த்து

Advertisement
மூன்றையும் கட்டிக் கொள்ளுங்கள் பின்னர் இதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்து, உங்கள் வீட்டு நிலைப் படியில் தலையில் தட்டாதவாறு கட்டிவிடுங்கள்.

இந்த பரிகாரத்தை அமாவாசையில் தான் செய்ய வேண்டும். அதுவும் வியாழக்கிழமை என்று வரும் அமாவாசையில் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த பரிகாரத்தை முதன் முதலில் தொடங்கும் போது வியாழக்கிழமையில் வரும் அமாவாசை அன்று தொடங்கி, பின்வரும் அமாவாசைகளில் செய்தால் நாம் நினைத்ததை விட அதிக பலனை கொடுக்கும். உப்பை தவிர மற்ற பொருட்களை மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மஞ்சள் துணியை அவிழ்க்கும் பொழுது இதனை மஞ்சளில் நனைத்து மறுபடியும் கட்டினால் சிறப்பாக இருக்கும்.

உப்பை மாற்றும் பொழுது சிறிய பாக்கெட்டில் தண்ணீர் எடுத்து உப்பை அதனில் கரைத்து யார் காலும் படாத வகையில் ஓரமாக ஊற்றி விடவும். இப்படி செய்தால் அந்த உப்பு கரைவது போல நமது வீட்டில் உள்ள கடனும் படிப்படியாக கரைந்து பணவரவை உண்டாக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

3 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

4 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

5 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

9 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

9 மணி நேரங்கள் ago