இந்த உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பணத்தை சம்பாதிப்பதற்கு அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நாமும் விதிவிலக்கு அல்ல பணத்தை சம்பாதிப்பதற்கு எந்த வழி கிடைத்தாலும் நாம் அதனை விட்டு வைப்பதில்லை. அதற்காக நம் வீட்டில் சில பரிகாரங்களும் செய்வது உண்டு. பொதுவாக நம் வீட்டில் மணி பிளான்ட் இருக்கும் அது இருந்தால் பணம் அதிகரிக்கும் என்பார்கள்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள வீடுகளில் மணி பிளான்ட் வளர்க்கப்பட்டு வருகிறது. மணி பிளான்ட் வளர்த்து வந்தால் பணம் அதிகரிக்கும் என்பது பரவலாக மக்களிடம் உள்ள நம்பிக்கை. வீடுகளில் மணி பிளான்ட் ஆனது புதர் போல வளர்ந்திருக்கும், சில வீடுகளில் சிறிதாக வளர்ந்திருக்கும். ஆனால் மணி பிளான்ட்க்கு நிகராக பணவரவை அதிகரித்து தரும் செடி ஒன்று உள்ளது. அதனை பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் அது என்ன செடி அதனை எவ்வாறு வளர்க்க வேண்டும், எந்த நாளில் வளர்த்தால் பணம் வரும் என்பதனை பற்றி இந்த வாஸ்து சாஸ்திர பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
மணி பிளான்ட்க்கு நிகராக பணத்தை ஈர்க்கும் தன்மை உடைய செடிதான் சங்குப்பூ செடியாகும். நம் தெருகளில் சில வீடுகளில் நாம் இந்தச் செடியினை பார்ப்பதுண்டு. இந்த செடியின் பூக்கள் பல நிறங்களில் பார்த்தாலும் நீல நிற கலர் உடைய இந்த பூவினை மக்கள் பெரும்பாலும் வளர்ப்பது உண்டு. இந்த நீல நிற சங்குப்பூ செடியை வீட்டில் வளர்த்து வந்தால் லட்சுமி கடாசம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இச்செடியினை வளர்த்தால் வீட்டில் செல்வ மழையாக பணம் பொழியும் என கூறப்படுகிறது.
ஆரோக்கிய ரீதியாக இந்த சங்கு பூவினை பல வழிகளில் பயன்படுத்துவது உண்டு. ஏன் நாமும் கூட சில நேரம் இதை உணவில் சேர்த்துக் கொள்வது உண்டு. சங்குப்பூ செடியிலிருந்து பறிக்கப்பட்ட பூக்களை கொண்டு தேநீர் கூட தயாரிப்பது உண்டு. இந்த சங்குப்பூ தேநீர் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இந்த அதிர்ஷ்டம் தரும் சங்கு பூ செடியை வாசலில் வலது பக்கத்தில் வைத்து செழிப்பாக வளர்த்து வந்தால் குடும்பமும் செழிக்கும், செல்வமும் செழிக்கும் என்பது நம்பிக்கை.
நாம் காலை எழுந்தவுடன் இந்த செடியின் முகத்தில் முழித்தால் அந்த நாளானது நமக்கு மிகவும் உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் அமையுமாம். அதுமட்டுமல்லாமல் மனதிற்கு இனிமையையும், கண்களுக்கு குளிர்ச்சியையும் இந்த செடியின் நிறமானது அளிக்குமாம். இந்தச் செடியினை நாம் எந்த நிறத்திலும் நம் வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக ஊதா நிற பூக்களை கொண்ட சங்கு பூச்செடியானது பணவரவை அதிகரிக்கும் தன்மையுடையது. அதற்கு மாறாக வெள்ளை நிற பூவினை உடைய
சங்குப்பூ செடியானது மனதிற்கு நிம்மதியையும், குடும்பத்தில் அமைதியையும் அளிக்கும்.நம் வீட்டில் வளரும் இந்த சங்கு பூவானது நமது பூஜை அறைகளிலும் சில சமயம் இடம் பெறுவதுண்டு. சங்குப்பூ சங்கு வடிவில் இருப்பதினால் மகாவிஷ்ணுவின் அம்சமாகவே கருதப்படுகிறது. எனவே மகாவிஷ்ணுவிற்கு உகந்த நாளான வியாழன் கிழமை அன்று சங்குப்பூ விதைகளை நட்டு வளர்த்து வருதல் மிகவும் அதிர்ஷ்டத்திற்கு உரியதாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் சங்குப்பூ மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பூவாகவும் விளங்குகிறது. எனவே இச்செடியை நாம் வெள்ளிக்கிழமைகளிலும் நட்டு வளர்த்து வரலாம். இப்படி இரண்டு கிழமைகளில் ஏதோ ஒன்றில் செடியினை நட்டு வளர்த்து வந்தால் அந்த வீட்டில் ஐஸ்வரியம் நிலைத்து நிற்கும் என்று நம்பப்படுகிறது.
சங்குப்பூ அடர்த்தியாக கொடியாக வளரக்கூடிய தன்மையுடையது இப்படி கொடியாக அடர்த்தியாக வளர்வது குடும்பத்திற்கு நல்லது அல்ல. எனவே அவ்வப்போது அச்சடியினை வெட்டி பராமரித்துக் கொள்வது நல்லது. செடியில் வளரும் பூவினை கொண்டு முதன் முதலில் விநாயகருக்கு பூஜை செய்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் எல்லாம் ஈடேறும். இப்பூவினை எல்லா தெய்வத்திற்கும் பூஜைக்காக பயன்படுத்தலாம். சங்குப் பூ செடி பல்வேறு வண்ணங்களில் நீங்கள் வளர்த்தால் அதுவும் அதிர்ஷ்டம் தரும் பலன்களை கொடுக்கும்.
இப்பதிவின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இச்செடியை உங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று வளர்த்து பண வரவை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்ளுங்கள்.
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…