மாலையில் ஒரு கப் தேநீருடன் சிற்றுண்டிகளை அனுபவிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் எளிதாகத் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், சுவையான பகர்வாடியை நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரு மிருதுவான மற்றும் ஆழமான வறுத்த மகாராஷ்டிர சிற்றுண்டி, பகர்வாடி அடிப்படையில் ஒரு காரமான பின்வீல் ஆகும், இது மகாராஷ்டிராவின் புனேவில் தோன்றியது.
இது பொதுவாக மாவு மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பண்டிகை கொண்டாட்டங்களின் போது செய்யப்படுகிறது. இது பொதுவாக மற்ற பிரபலமான இனிப்புகளுடன் காரமான சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது, ஆனால் இது ஒரு கப் தேநீருடன் மாலை நேர சிற்றுண்டியாக வழங்கலாம்.
மாலையில் ஒரு கப் தேநீருடன் சிற்றுண்டிகளை அனுபவிப்பதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் எளிதாகத் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்றால், சுவையான பகர்வாடியை நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரு மிருதுவான மற்றும் ஆழமான வறுத்த மகாராஷ்டிர சிற்றுண்டி, பகர்வாடி அடிப்படையில் ஒரு காரமான பின்வீல் ஆகும், இது மகாராஷ்டிராவின் புனேவில் தோன்றியது. இது பொதுவாக மாவு மற்றும் உலர்ந்த மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பொதுவாக பண்டிகை கொண்டாட்டங்களின் போது செய்யப்படுகிறது.
Course snacks
Cuisine Indian
Keyword Sweets
Prep Time 25 minutesmins
Cook Time 10 minutesmins
Total Time 35 minutesmins
Servings 5People
Calories 543
Equipment
1 கடாய்
1 மிக்ஸி
1 பவுள்
1 கரண்டி
Ingredients
மாவு தயாரிக்க
2கப் மைதா
1/4கப் கடலை
1டீஸ்பூன் ஓமம்
உப்பு சிறிதளவு
எண்ணெய் தேவையானஅளவு
வறுத்த அரைக்க
1 1/2டீஸ்பூன் மல்லி
1டீஸ்பூன் வெள்ளை எள்
1டீஸ்பூன் சீரகம்
1/2டீஸ்பூன் சோம்பு
2டேபிள் ஸ்பூன் தேங்காய்
1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2டீஸ்பூன் மஞ்சள்
உப்பு சிறிதளவு
1டீஸ்பூன் சுக்கு பொடி
3டேபிள் ஸ்பூன் சர்க்கரை
புளி சட்னி செய்ய
1/4கப் புளி
1/4கப் வெல்லம்
1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
1டீஸ்பூன் சீரகத்தூள்
1/2டீஸ்பூன் கரம் மசாலா தூள்
உப்பு
Advertisement
சிறிதளவு
எண்ணெய் தேவையானஅளவு
Instructions
மாவு தயாரிக்க :
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கடலை மாவு, ஓமம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கையால் நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு சூடான எண்ணெயை அதில் சேர்த்து நன்றாக கையால் கலந்து கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் வறுக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து நிறம் மாறும் அளவு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பை அணைத்துடன் சூடாக இருக்கும் போதே மிளகாய் தூள் மஞ்சள் தூள் சுக்குத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
Advertisement
இறுதியாக சிறிது உப்பும் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்த பிறகு அதில் சர்க்கரையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
புளி சட்னி செய்ய :
ஒரு பாத்திரத்தில் புளி, வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அது கொதித்து கெட்டியானதும் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய புளிக்கரைசலுடன் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா உப்பு சேர்த்து கலந்தால் புளி சட்னி தயார்.
இப்போது பிசைந்த மாவை எடுத்து நன்றாக நீளவாக்கில் தேய்த்து அதை ஓரங்களில் சரிசமமாக கட் செய்து கொள்ளவும்.
அந்த மாவின் மீது புளி சட்னியை வைத்து நன்றாக தேய்த்துக் கொள்ளவும். ஓரங்களில் தேய்க்க கூடாது நடுவில் மட்டும் தேய்த்து விட்டு நாம் செய்த பொடியையும் அதன் மேல் தூவி நன்றாக பொடியை புளி சட்னியில் ஒட்ட வைக்கவும்.
பின்னர் மாவினை சுருட்டிக் கொள்ளவும். மாவின் ஒரு பகுதியை நன்றாக விரல்களால் அமுக்கி விட்டு அந்த இடத்தில் நன்றாக தண்ணீர் தடவி வைக்கவும். அப்பொழுது தான் சுருட்டிக்கொண்டு கடைசியாக வரும்போது அந்த இடம் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.
சுருட்டியதை அரை இன்ச் அகலத்தில் வெட்டி அதை விரலால் நன்றாக அமுக்கி தட்டையாக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அந்த எண்ணெயில் நாம் செய்து வைத்துள்ள பாகர்வாடியை போட்டு சலசலப்பு அடங்கும் வரை பொரித்தெடுக்கவும்.
இப்போது சூடான சுவையான இனிப்பான புளிப்பான காரசாரமான பாகர்வாடி தயார்.