இந்த உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பணத்தை சம்பாதிப்பதற்கு அதன் பின்னே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நாமும் விதிவிலக்கு அல்ல பணத்தை சம்பாதிப்பதற்கு எந்த வழி கிடைத்தாலும் நாம் அதனை விட்டு வைப்பதில்லை.
நாம் என்னதான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் சில சமயங்களில் அதற்கான பலன் நம்மிடம் வந்து சேர்வதில்லை. அதற்கு சில அதிர்ஷ்டம் தரும் பொருட்களை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள்.
வாஸ்துவில் அடையாளங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அதுவும் இந்த அடையாளங்கள் வீட்டினுள் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, வீட்டின் நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
இப்போது வாஸ்துப்படி, எந்த பொருட்கள் வீட்டில் இருந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும் என்பது குறித்து காண்போம்.
மீன்கள் செல்வத்தின் சக்தி வாய்ந்த அடையாளமாகும். ஒருவரது வீட்டில் மீன் தொட்டியை வைத்திருக்கும் போது, அது அந்த வீட்டில் செல்வத்தைக் கொண்டு வரும். அதுவும் அந்த மீன் தொட்டியை வீட்டின் ஹாலில் வைப்பது தான் நல்லது. மீன்களில் கோல்டன் மீன் தான் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே இந்த வகை மீன்களை வாங்கி வைப்பது, வீட்டில் செல்வத்தை அதிகரிக்கும்.
செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் மற்றொரு பொருள் சிரிக்கும் புத்தர். இந்த சிரிக்கும் புத்தரை வீட்டின் வாசலை பார்த்தவாறு வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது இது செல்வத்தை வீட்டிற்குள் ஈர்க்கும். சிரிக்கும் புத்தர் சிலை பல்வேறு நிறங்களில் விற்கப்படுகிறது. உங்கள் வீட்டிற்கு எது பொருத்தமாக இருக்குமோ, அதை வாங்கி வையுங்கள்.
வாஸ்து படி மூன்று கால் தவளை அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை ஈர்க்கும் மற்றொரு அடையாளமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டுமானால், வாயில் நாணயங்களை கவ்விக் கொண்டிருக்கும் மூன்று கால் தவளையை வாங்கி வையுங்கள்.
பொதுவாக வீட்டில் நீரூற்று இருந்தால்,
அதிலிருந்து வெளிவரும் நீரின் ஓசையால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதுவும் வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டுமானால், 6 அடுக்கு நீரூற்றை வாங்கி வையுங்கள். அதுவும் இதை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும்.பொதுவாக செடிகளானது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றிவிடும். முக்கியமாக வீட்டில் வளர்க்கும் செடிகளை காய்ந்து
போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சிறந்த வழி வட்ட வடிவ இலைகளைக் கொண்ட செடிகளை வளர்ப்பது தான். எனவே தாமரை, நீர் லில்லி போன்ற செடிகளை வளர்த்து வாருங்கள்.பாய்மரக் கப்பல்கள் செல்வத்தை ஈர்க்கும் சிறந்த அடையாளாகும். வீட்டினுள் படகு செல்வது போன்ற போட்டோவை வைக்கும் போது, அது வீட்டிற்குள் செல்வத்தை கொண்டு வரச் செய்யும். இந்த மாதிரியான கப்பல்களை எத்தனை வேண்டுமானாலும் வைக்கலாம்.
பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை வீட்டில் வைக்கும் போது அது வீட்டில் செல்வத்தை கொண்டு வரும். ஆனால் டைனிங் டேபிளில் எப்போதும் நற்பதமான பழங்களை வைத்திருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள். தினமும் நற்பதமான பழங்களை வைக்க முடியாதவர்கள், பிளாஸ்டிக் பழங்களை வைக்கலாம். ஆனால் கண்ணாடியில் அந்த பழங்கள் தெரிய வேண்டும்.
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…
அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…
மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…
எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…