Advertisement
ஆன்மிகம்

செலவு செய்ய செய்ய பண வர வேண்டுமா? பணத்தை இந்த டப்பாவில் போட்டு செலவு செய்யுங்கள்!

Advertisement

நாம் பணத்தை செலவு செய்யும் போது, நாம் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானம் வருகிறது என்றால் அதை நினைத்து என்றுமே வருத்தப்படக்கூடாது. நாம் நல்ல விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்யும் போது எப்பொழுதும் முழு மனதுடன் சந்தோஷமாக செலவு செய்யும் போது நாம் செலவு செய்த பணத்தை விட இரண்டு மடங்கு பணம் நமக்கு திருப்பி கிடைக்கும். நீங்கள் நம்பவில்லை என்றாலும் இது தான் உண்மை. இன்றும் பலரும் இந்த வகையில் செலவு செய்வதால் தான் அவர்கள் செலவு செய்தாலும் அவர்களிடம் பணம் தேங்கி கொண்டே இருக்கும். அதை விட்டுவிட்டு பணம் போகிறது என வருத்தப்பட்டால் பணம் உங்கள் கையில் சேரவே சேராது. இது போன்று பணம் சேர இருக்கும் சிறிய வழிகளை நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

பணத்தை இந்த டப்பாவில் வையுங்கள்

இப்போதெல்லாம் யாரும் சம்பள பணத்தை கைகளில் வாங்குவது கிடையாது மாறாக அவரவர் வங்கி கணக்கில் சம்பள பணம் செலுத்தி விடுகிறார்கள். அப்படி உங்கள் வீட்டில் இருக்கும் கணவர் சம்பாதித்த பணமாக இருந்தாலும், மனைவி சம்பாதித்த பணமாக இருந்தாலும், ஏன் உங்கள் மகன், மகள் யார் சம்பாதித்த பணமாக இருந்தாலும் வாங்கி கணக்கில் இருந்து உங்களது தேவைகளுக்கு பணம் எடுப்பீர்கள் அல்லவா, அப்படி எடுத்து வந்த பணத்தை நம் வீட்டு பீரோவிலோ அல்லது நம் வீட்டில் இருக்கும் பணப்பெட்டியில் வைத்திருப்போம்.

Advertisement

இப்படி வங்கியில் இருந்து நாம் வீட்டு செலவுக்காக எடுத்து வந்த பணத்தை உங்கள் வீட்டில் சமையல் அறையில் வெந்தயம் போட்டு வைப்பதற்காக இருக்கும் அந்த டப்பாவில் நாம் வைத்திருக்கும் பணத்தை ஒரு கவரில் வைத்து அதில் போட்டு விடுங்கள். இப்படி வீட்டில் வரும் சின்ன சின்ன செலவுகளுக்கு பணத்தை வீட்டில் இருக்கும் பெண் அந்த வெந்தய டப்பாவில் இருந்து எடுத்து செலவு செய்வதற்காக முழு மனதுடன் கொடுக்க வேண்டும் அப்படி நாம் செலவுக்கு கொடுக்கும் பணம் அனாவசிய செலவுக்காக இருக்க கூடாது அத்தியாவசியமாக தேவைப்படும் பால், காய்கறிகள் போன்ற பொருட்கள் வாங்குவதற்காக இருக்க வேண்டும்.

வறுமை இருக்காது

ஏன் நீங்கள் வீட்டிற்கு மளிகை சாமான் வாங்குவதற்கு செலவு செய்யும் பணம் குழந்தைகளின் படிப்புக்காக செலவு செய்யும்

Advertisement
பணம் இது போன்று அத்தியாவசியமான செலவுகளுக்கு பணம் இந்த வெந்தய டப்பாவில் இருந்து எடுத்து நீங்கள் செலவு செய்யும் போது உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் வருமானம் இது போன்ற செலவுகளுக்காக வந்து கொண்டே இருக்கும் அது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு பண பிரச்சனை ஏன் வறுமை என்ற சொல்லுக்கு கூட அங்கு இடம் இல்லாத அளவிற்கு பார்த்துக் கொள்ளும்.

11 வெந்தயம்
Advertisement

இல்லை வீட்டில் இருக்கும் வெந்தய டப்பாவில் பணம் வைத்து எடுக்க முடியாதவர்கள் ஒரு சிவப்பு நிற காட்டண் துணி எடுத்துக் கொண்டு. அந்த துணியில் ஒரு 11 வெந்தயத்தை வைத்து முடிச்சு போட்டு கொள்ளுங்கள் இந்த முடிச்சை அப்படியே நீங்கள் பீரோவில் பணம் வைத்து எடுக்கும் இடம் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் பணப்பெட்டி வைத்து விடுங்கள். மேலும் வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் தங்கள் பர்ஸில் பணம் வைக்கும் இடத்திலும் ஒரு ஐந்து வெந்தயத்தை போட்டு வைத்தால் உங்களிடம் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

சில்லரையை சேமியுங்கள்

மேலும் வீட்டில் பணத்தட்டுப்பாடு வராமல் பணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்காக நாம் வீட்டில் ஆங்காங்க போட்டு வைத்திருக்கும் சில்லறைகளை வீட்டு பெண்கள் சேமித்து வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றாலும் நீங்கள் பொருள்கள் வாங்கியது போக மீறி வரும் சில்லறைகளை வீட்டில் இருக்கும் டப்பா அல்லது உண்டியல் வாங்கி வைத்து அதில் காசுகளை சேர்க்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றி வரும்போது உங்களுக்கே தெரியாமல் அந்த பணத்திற்கே உங்கள் மீது ஆசை வந்து உங்களுடன் ஒட்டிக்கொள்ளும். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை வராமல், ஒரே சீரான முறையில் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும். நீங்கள் செலவு செய்ய செய்ய பணம் வரவு இருந்து கொண்டே தான் இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

9 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

11 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

13 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

17 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

17 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

18 மணி நேரங்கள் ago