மணத்தக்காளி… இதை மணித்தக்காளி, மிளகுத் தக்காளிக்கீரைன்னும்கூட சொல்வாங்க, இந்தக் கீரையில புரதச்சத்தும், இரும்புச் சத்தும் அதிகமா இருக்கு. எல்லா இடங்கள்லயும் ரொம்ப சாதாரணமா வளரக்கூடிய இந்தக்கீரை அடிப்படையில குளிர்ச்சித் தன்மை உள்ளது. இதனால நிறைய நோய்கள் சரியாகும். பொதுவா உடல் சூடு அதிகமா இருந்தாலே பல நோய்கள் வரிசை கட்டி வரும். அதனால உடல் சூட்டை குறைக்கிறதுல இந்தக்கீரை முக்கியமானது. வாய்ப்புண் வயிற்றுப்புண்ணை சரிபண்றதுக்கு என்னென்னவோ மருந்துகளைச் சாப்பிடுறவங்க முதல்ல மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டு பார்க்கலாம்.
மணத்தக்காளிக்கீரையை வெறுமனே வாய்ல போட்டு மென்னு சாறை விழுங்கலாம். இல்லன்னா கீரையை சமைச்சி சாப்பிடலாம். சூப் போட்டுகூட குடிக்கலாம். மணத்தக்காளியோட கொஞ்சம் சீரகம். மிளகாய் வற்றல் சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி தண்ணி சேர்த்து வேக வச்சி கடைசியா தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டா வாய்ப்புண்ணும் வயித்துப்புண்ணும் சரியாயிரும். இந்தமாதிரி உங்களுக்கு எந்தமாதிரி வழி பிடிக்குதோ அப்படி மணத்தக்காளிக்கீரையை தயார் பண்ணி சாப்பிட்டு வந்தா பலன்பெறலாம். இதை ஒருநாள் சாப்பிட்டா பலன் கிடைக்காது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தா நிச்சயம் பலன் கிடைக்கும். இதுமட்டுமில்ல இருமல், இளைப்பு நோய்கள்கூட சரியாகும். வயிற்றுப்போக்கு பிரச்சினையும் சரியாகும்.
சிலபேர் ஒழுங்கா சிறுநீர் போகாம சிரமப்படுவாங்க. அதேமாதிரி வியர்வை வெளியேறாமலும் கஷ்டப்படுவாங்க. அப்படிப்பட்டவங்க இந்தக்கீரையை சாப்பிட்டு வந்தா அதை இயல்பா வெளியேத்துறதுக்கு உதவும். முக்கியமா உடம்புல உள்ள கெட்ட நீரை வெளியேத்துறதுக்கு மணத்தக்காளிக்கீரை ரொம்ப நல்லது. சிறுநீர் போகாம சிரமப்படுற பலபேர் வேற வேற சிகிச்சை எடுத்துப்பார்த்து அது பலனளிக்காம இருப்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு மணத்தக்காளிக்கீரை ரொம்ப நல்லது. கைப்பிடி அளவு கீரையோட பார்லி அரிசி ஒரு ஸ்பூன், கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து கசாயம் பண்ணி குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும்.
கருப்பையில உள்ள கெட்ட அழுக்குகள் வெளியேறுறதோட கர்ப்பப்பை புண் சரியாகும். நாளடைவில மாதவிடாய் கோளாறுகள் எல்லாம் சரியாகி கரு உண்டானா அதை தாங்குற சக்தி கிடைக்கும். வேற என்னென்னவோ சிகிச்சை எடுக்கிறவங்க மணத்தக்காளிக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். கல்யாணம் ஆனதும் கணவன், மனைவி ரெண்டுபேரும் மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். குறிப்பா பெண்கள் சாப்பிடுறதால சுகப்பிரசவம் நடக்கிறதுக்கும் நல்ல தீர்வா இருக்கும்.
கல்லீரல் பிரச்சினை, மஞ்சள்காமாலைன்னு பல பிரச்சினைகளுக்கு மணத்தக்காளி நல்லது. நெஞ்சுவலி உள்ளவங்க மணத்தக்காளிக்கீரையை காய வச்சி பொடியாக்கி சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். மணத்தக்காளின்னு சொன்னதும் நாம அந்தக்கீரையை மட்டுந்தான் பயன்படுத்துவோம். அதோட காயை தனியா சமைச்சி சாப்பிடலாம். அதேமாதிரி மணத்தக்காளி பழத்தை செடியில இருந்து பறிச்சி கழுவி அப்பிடியே சாப்பிடலாம். காயை மோர்ல ஊற வச்சி காய வச்சி வற்றலாக்கி வறுத்துச் சாப்பிடலாம். குழம்பு வச்சும் சாப்பிடலாம்.
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…
பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…
சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…
டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…
மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…
ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…