என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக
வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த கல்யாண வீட்டு செளசௌகாய் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும். ஆகையால் இன்று இந்த கல்யாண வீட்டு சௌசௌக்காய் கூட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கல்யாண வீட்டு சௌசௌக்காய் கூட்டு | Chow Chowkai Koottu Recipe in Tamil
சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த கல்யாண வீட்டு செளசௌகாய் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கும் பிடிக்கும். நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword chow chowkai koottu, சௌசௌக்காய் கூட்டு
Prep Time 20 minutesmins
Cook Time 20 minutesmins
Total Time 40 minutesmins
Servings 5People
Calories 168
Equipment
1 கடாய்
1 மிக்ஸி
1 குக்கர்
Ingredients
200கிராம்சௌசௌக்காய்
100கிராம்பாசி பருப்பு
3tbspகடலைபருப்பு
1பெரிய வெங்காயம்நறுக்கியது
¼tspமஞ்சள் தூள்
1தக்காளிநறுக்கியது
1சிட்டிகைபெருங்காய தூள்
உப்புதேவையான அளவு
தேங்காய் அரைக்க
100கிராம்துருவிய தேங்காய்
3பச்சை மிளகாய்
1tspசீரகம்
தாளிக்க
2tbspஎண்ணெய்
1tspகடுகு
½tspஉளுந்த பருப்பு
¼tspசீரகம்
3வர மிளகாய்
1கொத்துகருவேப்பிலை
Instructions
முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் கடலைப்பருப்பையும், பாசிப்பருப்பையும் எடுத்து கொண்டு இரண்டு மூன்று முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள்.
பின் இரண்டு பருப்பையும் ஒரு பவுளில் சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இருபது நிமிடங்கள் நனறாக ஊற வைத்து கொள்ளும். பின் தேங்காய் அரைக்க ஒரு மிக்ஸி ஜாரரை எடுத்து கொண்டு
Advertisement
அதில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து ஒரு பவுளில் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் ஊற வைத்த பருப்புகளை தண்ணீர்ரை வடிகட்டி கொண்டு பின்ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குழையாமல் வேக வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , எண்ணய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி வெங்காயம கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் செளசெள காயை சேர்த்து கிளறி விட்டு வேக வைத்து கொள்ளவும். பின் காய் பாதி வெந்தவுடன் நாம் அரைத்த தேங்காய் விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு குறைவின தீயில் வேக விடவும்.
பின் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்துத் நன்றாக தாளித்து செளசெள கூட்டுடன் சேர்த்துக் கிளறி விட்டு கடாயை இறக்கி கொள்ளவும். அவ்வளவு தான் கல்யாண வீட்டு சௌசௌக்காய் கூட்டு தயார்.