Advertisement
ஆன்மிகம்

உங்கள் தங்க நகை இனி அடகுக்கே செல்ல கூடாதா ? வீட்டில் மேலும் தங்கம் சேர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Advertisement

அனைவரோட வாழ்க்கையும் எளிதாக இருக்காது ஒரு சிலருக்கு வீட்டில் தங்க நகை வாங்குவது என்பது சர்வ சாதாரணமான செயலாக இருக்கும் ஏதாவது பண்டிகைகள் நிகழ்ச்சிகள் வந்துவிட்டால் ஒரு தங்க நகை வாங்கி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் வாழ்வையே கஷ்டப்பட்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் அவர்கள் சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை வைத்து தங்கம் நகைகள் வாங்குகிறார்கள். அப்படி கஷ்டப்பட்டு வாங்கிய தங்க நகை அடமானத்திற்கு செல்லும் போது அதன் வலி வேதனை என்னவென்று ஒருபோதும் எவராலும் விவரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஆனா வலி அவர்களுக்கு இருக்கும்.

தீடீர் பண தேவை

அப்படி அவர்கள் தங்க நகையை அடமானம் வைப்பதும் ஏதாவது வீண் செலவுகளுக்காக கூட இருக்காது. அவர்களை எதிர்பாக்காத வண்ணம் வீட்டில் திடீரென யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கும் இல்லையென்றால் ஏதாவது மிகப்பெரிய செலவு ஒன்று வந்திருக்கும். அப்படிப்பட்ட நிலையில் தான் பண தேவைக்காக நகையை அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதை தவிர அவர்கள் இடம் முதலீடு என்று எதுவுமே இருக்காது இப்படி அடகுக்கு சென்ற நகையை மீட்பதற்காகவும் இனிமேல் உங்களது அழகுக்கு செல்லாமல் இருப்பதற்காகவும் சொல்லப்பட்ட பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் காண உள்ளோம்.

Advertisement

அலட்சியம்

நாம் கஷ்டப்பட்டு வாங்கிய தங்கை நகையை நாம் எப்படி பத்திரமாக பாதுகாக்கிறோம் என்பதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றது. நாம் வீட்டில் நகைகளை கண்ட இடத்தில் போட்டு வைத்திருக்க கூடாது. தங்க நகையை கழட்டும் போது கழட்டி இடத்திலேயே மறுந்தும் கூட வைக்க கூடாது. இப்படி நீங்கள் தங்க நகையை கையாளுவதில் அலட்சியம் காட்டுது தங்கத்தின் மீது அலட்சியம் காட்டியதற்கு சமம். அப்படி நாம் அலட்சியம் காட்டும்போது நம்மிடம் இருக்கும் தங்கம் நம்மிடத்தில் நிலையாக தாங்கால் நம்மை விட்டு விலகி செல்லும்.

Advertisement

மகா லட்சுமி

முதலில் நீங்கள் அடமானத்திற்கு வைத்த தங்க நகைகளை திருப்பும் போது அதற்காக நீங்கள் செலுத்தும் பணத்தை உங்களின் இரு கைகளால் கொடுக்க வேண்டும். நீங்கள் சாதாரணமாக ஒரு கையால் பணம் கொடுக்கக் கூடாது. அதேபோல் நகையை திருப்பும் போது அவர்கள் தங்க நகைகளை

Advertisement
கொடுக்கும்போது அதை இரண்டு கைகளால் வாங்க வேண்டும் ஏனென்றால் ஸ்வர்ணம் என்பது மகாலட்சிமியின் அம்சமாக விளங்க கூடிய ஒன்று. அப்படி மகாலட்சுமியே நம் வீட்டிற்கு அழைக்கும் போது பயபக்தியோடு செயல்பட வேண்டும். இப்படி செய்யும் போது அந்த தங்கம் நம் வீட்டில் தங்க விருப்பப்படும்.

வாங்கி அணியக்கூடாது

அப்படியே நீங்கள் அடமானத்திலிருந்து திருப்பி வந்த தங்க நகை வாங்கி வந்தவுடன் நேரடியாக அணிந்து கொள்ளக் கூடாது. ஒரு பாத்திரத்தில் மஞ்சள் கலந்த தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் அந்த தங்க நகையை நன்கு அலசி கொண்டு சென்று உங்கள் பூஜை அறையில் இருக்கும் ஏதாவது ஒரு சாமி படத்திற்கு சிறிது நேரம் அணிவித்து விடுங்கள். அதன் பிறகு அந்த தங்க நகைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம் இல்லை நீங்கள் பீரோவில் பத்திரப்படுத்த போகிறீர்கள் என்றால் நீங்கள் தங்க நகை வைக்கும் இடம் வாசனை நிறைந்து காணப்பட வேண்டும். அதற்காக அங்கு ஜவ்வாது, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற வாசனை நிறைந்த பொருட்கள வைத்து கொள்ளுங்கள். இதுபோன்ற செய்யும்போது நகை மீண்டும் அடகுக்கு செல்லாது

Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

14 நிமிடங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

24 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

36 நிமிடங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

2 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

5 மணி நேரங்கள் ago