பொதுவா உடல் சூட்டைக் குறைச்சி வெள்ளைப்படுதல், வெட்டை நோய்களை சரி பண்றதுக்கு ஓரிதழ் தாமரை ரொம்ப உதவியா இருக்கும். `வெட்டை முற்றினால் கட்டையிலே…’ ன்னு ஒரு பழமொழி இருக்கு. அந்த அளவுக்கு மோசமான விளைவை உண்டாக்குற வெட்டை நோயைக்கூட விரட்டி அடிக்கக்கூடியது இந்த ஓரிதழ் தாமரை. பல பெண்களை பாடாப்படுத்தி எடுக்குற பிரச்சினை இது. பலபேர் இதை வெளிய சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு இது உதவியா இருக்கும்னு நம்புறேன்.
தினமும் காலைல வெறும் வயித்துல கைப்பிடி அளவு ஓரிதழ் தாமரைப் பூவையும், அதே அளவு இலையையும் பறிச்சு வெறும் வாயில போட்டு நல்லா மென்னு சாப்பிடணும். அதுக்கு அப்புறமா பசும்பால் குடிக்கணும். இந்த மாதிரி தொடர்ந்து ஏழு நாள் சாப்பிட்டு வந்தா சூடு குறைஞ்சி வெள்ளை, வெட்டை ஓடிப்போயிரும். இதை சாப்பிடுற நேரத்துல காரம், புளி இல்லாத சாப்பாடு சாப்பிட்டா நல்லது. காரத்துக்கு மிளகாய்க்குப் பதிலா மிளகும், புளிக்குப் பதிலா எலுமிச்சம்பழமும் சேர்த்துக்கலாம்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஓரிதழ் தாமரை ரொம்ப நல்லது. ஓரிதழ் தாமரையோட கொழுந்து இலையை எடுத்து நல்லா கழுவி அம்மியில வச்சு நல்லா அரைச்சு எடுக்கணும். அதை காய்ச்சுன பசும்பால்ல போட்டு கலந்து காலைல ஏழு நாள்
தொடர்ந்து குடிக்கணும். முக்கியமா சிறுநீர் போற இடத்துல வரக்கூடிய எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போற பிரச்சினைன்னு எல்லாமே சரியாயிடும். சிறுநீரகம் தொடர்பான பலவிதமான பிரச்சினைகள்ல பலபேர் ரொம்ப சிரமப்படுறாங்க. வெள்ளைப்படுதல் பிரச்சினை மாதிரியே இந்தப் பிரச்சினையையும் வெளிய சொல்ல வெக்கப்பட்டு உள்ளுக்குள்ளேயே கஷ்டப்படுறாங்க. அதுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியது இந்த மூலிகை.சிலபேருக்கு சிற்றின்பத்துல அதிகமா ஈடுபாடு இருக்கும். அதனால அவங்களோட உடல்பலம் குறைஞ்சி ரொம்ப சிரமப்படுவாங்க. இதுக்கு ஒட்டுமொத்த செடியையும் அரைச்சி தயிர் சேர்த்து காலைல மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே அந்தப் பிரச்சினைகள் சரியாயிரும். உடம்பு நல்லா சுறுசுறுப்பாகும். ஆனா, அதை நாம சரியா பயன்படுத்தணும். இந்தமாதிரி ரொம்ப சாதாரணமா கிடைக்கக்கூடிய மூலிகைகள் நிறைய நல்ல பலன்களை நமக்கு தரும். அளவோட சாப்பிட்டு பலன்களைப் பெறுவோம்.
ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக…
பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன்…
இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த பாலக் கீரையை வாரத்தில் ஒரு நாளாவது நம்முடைய உணர்வோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும்…
கற்றாழை ஒரு சில இடங்களில் கொத்து கொத்தாக நிறைய இருக்கும் ஆனால் கற்றாழையின் பயன்கள் நமக்கு தெரியாததால் அதனை அலட்சியமாக…
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக முட்டை பிரியாணி என்றால் சொல்லவா…