வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தும் அற்புத மூலிகை!

- Advertisement -
  • ஓரிதழ் தாமரைன்னு ஒரு மூலிகை இருக்கு. சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனா, ஓரிதழ் தாமரைன்னு சொன்னவுடனே பலபேர் தாமரை பூவுல ஒரு வகையான்னு கேப்பாங்க. தாமரை பூவுக்கும் ஓரிதழ் தாமரைக்கும் சம்பந்தமே இல்லை. அது தண்ணியில வளரக்கூடிய ஒரு தாவரமே இல்லை, நிலத்துல வளரக்கூடியது. மழைக்காலத்துல செழிச்சி வளரும். ஈரப்பதம் உள்ள இடங்கள்ல இதை பார்க்கலாம். ரொம்ப சாதாரணமா பூங்காக்கள்ல கூட இந்த ஓரிதழ் தாமரையைப் பார்க்கலாம். ஆனா, அடையாளம் காண்றது கொஞ்சம் சிரமமா இருக்கும்.

சூடு குறைக்கும்

பொதுவா உடல் சூட்டைக் குறைச்சி வெள்ளைப்படுதல், வெட்டை நோய்களை சரி பண்றதுக்கு ஓரிதழ் தாமரை ரொம்ப உதவியா இருக்கும். `வெட்டை முற்றினால் கட்டையிலே…’ ன்னு ஒரு பழமொழி இருக்கு. அந்த அளவுக்கு மோசமான விளைவை உண்டாக்குற வெட்டை நோயைக்கூட விரட்டி அடிக்கக்கூடியது இந்த ஓரிதழ் தாமரை. பல பெண்களை பாடாப்படுத்தி எடுக்குற பிரச்சினை இது. பலபேர் இதை வெளிய சொல்ல முடியாம தவிச்சிட்டு இருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு இது உதவியா இருக்கும்னு நம்புறேன்.

-விளம்பரம்-

வெள்ளை வெட்டை சரியாகும்

தினமும் காலைல வெறும் வயித்துல கைப்பிடி அளவு ஓரிதழ் தாமரைப் பூவையும், அதே அளவு இலையையும் பறிச்சு வெறும் வாயில போட்டு நல்லா மென்னு சாப்பிடணும். அதுக்கு அப்புறமா பசும்பால் குடிக்கணும். இந்த மாதிரி தொடர்ந்து ஏழு நாள் சாப்பிட்டு வந்தா சூடு குறைஞ்சி வெள்ளை, வெட்டை ஓடிப்போயிரும். இதை சாப்பிடுற நேரத்துல காரம், புளி இல்லாத சாப்பாடு சாப்பிட்டா நல்லது. காரத்துக்கு மிளகாய்க்குப் பதிலா மிளகும், புளிக்குப் பதிலா எலுமிச்சம்பழமும் சேர்த்துக்கலாம்.

- Advertisement -

சிறுநீரகக் கோளாறு

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஓரிதழ் தாமரை ரொம்ப நல்லது. ஓரிதழ் தாமரையோட கொழுந்து இலையை எடுத்து நல்லா கழுவி அம்மியில வச்சு நல்லா அரைச்சு எடுக்கணும். அதை காய்ச்சுன பசும்பால்ல போட்டு கலந்து காலைல ஏழு நாள் தொடர்ந்து குடிக்கணும். முக்கியமா சிறுநீர் போற இடத்துல வரக்கூடிய எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போற பிரச்சினைன்னு எல்லாமே சரியாயிடும். சிறுநீரகம் தொடர்பான பலவிதமான பிரச்சினைகள்ல பலபேர் ரொம்ப சிரமப்படுறாங்க. வெள்ளைப்படுதல் பிரச்சினை மாதிரியே இந்தப் பிரச்சினையையும் வெளிய சொல்ல வெக்கப்பட்டு உள்ளுக்குள்ளேயே கஷ்டப்படுறாங்க. அதுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியது இந்த மூலிகை.

ஆண்மைக்கோளாறு போக்கும்

தாது விருத்தி… அதாவது உடம்பு நல்ல உறுதியா இருக்கிறதுக்கும், ஆண்மைக் கோளாறை சரிபண்றதுக்கும் ஓரிதழ் தாமரை உதவும். இதுக்கு ஓரிதழ் தாமரைப் பூவையும், இலையையும் நல்லா கழுவி எடுத்து பசும்பால்ல வேடு கட்டி வேகவச்சி எடுத்து காயவைக்கணும். அதாவது இட்லி பானையில வச்சி வேக வைக்கணும். தண்ணிக்குப் பதிலா பாலை ஊத்தி வேக வச்சி எடுத்து அதை வெயில்ல காய வைக்கணும். அதுல அரை ஸ்பூன் அளவு தொடர்ந்து 48 நாள் சாப்பிட்டு பசும்பால் குடிக்கணும். இதை தொடர்ந்து செஞ்சிட்டு வந்தா உடல் பலம் கூடும். முக்கியமா ஆண்மைக்குறையால அவதிப்படுறவங்களுக்கு நல்லாவே உதவியா இருக்கும்.

உடல் சுறுசுறுப்பாகும்

சிலபேருக்கு சிற்றின்பத்துல அதிகமா ஈடுபாடு இருக்கும். அதனால அவங்களோட உடல்பலம் குறைஞ்சி ரொம்ப சிரமப்படுவாங்க. இதுக்கு ஒட்டுமொத்த செடியையும் அரைச்சி தயிர் சேர்த்து காலைல மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே அந்தப் பிரச்சினைகள் சரியாயிரும். உடம்பு நல்லா சுறுசுறுப்பாகும். ஆனா, அதை நாம சரியா பயன்படுத்தணும். இந்தமாதிரி ரொம்ப சாதாரணமா கிடைக்கக்கூடிய மூலிகைகள் நிறைய நல்ல பலன்களை நமக்கு தரும். அளவோட சாப்பிட்டு பலன்களைப் பெறுவோம்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here