நம் வீட்டில் பணம், சொத்து சுகங்கள் அனைத்து விதமான செல்வங்களும் சேர வேண்டுமானால் அதற்காக உழைக்க வேண்டும் உழைப்பதன் மூலமாகவே மட்டுமே நமக்கும் மகாலட்சுமி தயாரின் அருள் கிடைக்கும். அதன் மூலமாகவே நமது வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் சேரும். ஆனால் ஒரு சிலரோ வருடம் முழுவதும் கடினமாக அயராது உழைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு குறைவான அளவிலே வருமானமே ஈட்டுவார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணம் கூட அவர்கள் கையில் தாங்காத வண்ணம் வீண் செலவாகிக் கொண்டே இருக்கும்.
இன்னொரு பக்கம் ஒருவர் எளிதான வேலைகளை செய்து குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் அளவில்லா பணம், சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். இப்படி நம்மால் எவ்வளவு சம்பாதிக்க முடியும் எவ்வளவு செல்வங்களை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்து செயல்படுவது முக்கியம். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தயாரின் கிட்டி. வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கும் பின்பு ஆன்மீக ரீதியாக நம் வீட்டில் உள்ள செல்வங்கள், பணத்தை எப்படி பெருக்குவது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பொதுவாக அனைவரது வீடுகளிலும் பீரோக்கள் கண்டிப்பான முறையில் இருக்கத்தான் செய்யும் அப்படி நம் வீட்டில் வைத்திருக்கும் பீரோவில் உள்ள இரும்பு பகுதியை தொட்டவாறு ஏதாவது வீட்டில் இருக்கும் வெள்ளிப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் இரும்பு பீரோவில் எப்பொழுதும் வெள்ளி நாணயங்கள் ஏதாவது ஒன்று இருப்பது போன்று செய்து கொள்ளுங்கள்.
இல்லை உங்கள் வீட்டில் மர பீரோ உள்ளது என்கிற பட்சத்தில் மர பீரோவின் சாவியோ அல்லது பூட்டு உள்ள இடமோ கண்டிப்பான முறையில் இருப்பாகத்தான் இருக்கும். அந்த இடங்களில் வெள்ளி உலோகம் இருப்பது போன்று செய்து கொள்ளுங்கள். உதாரணமாக பீரோ
மரமாக இருந்தாலும் சாவி இரும்பில் தான் இருக்கும். அதில் கீ செயின் வெள்ளியால் செய்யப்பட்டதாக போடலாம் அல்லது பூட்டில் ஏதாவது வெள்ளி தொட்டபடி இருப்பது போன்று செய்து விடுங்கள்.இன்னும் பெரும்பாலான வீட்டில் அலமாரி போன்ற அமைப்பில் சுவரொடும் சேர்த்து, பீரோ போல் வைத்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் அந்த அலமாரியில் பணம் அல்லது
தங்கம் வைப்பதற்கு செய்யப்பட்ட லாக்கர் அல்லது பண பெட்டி ஏதாவது வைத்து இருப்பார்கள் அல்லவா அந்த லாக்கரில் வெள்ளி நாணயங்கள் அல்லது வெள்ளி பொருட்கள் எப்போதும் இருக்கும் படி இருப்புடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி உங்கள் வீட்டில் நீங்கள் பணம் வைத்திருக்கும் பீரோ அலமாரி லாக்கர் என எதுவாக இருந்தாலும் ஒரு கடுகளவாது வெள்ளி பொருட்கள் இருப்பது போன்ற செய்து கொள்ளுங்கள்.ஏனென்றால் நாம் பணம் வைக்கும் இடமாக இருந்தாலும் தங்கம் வைக்கும் இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் சிறிதளவு வெள்ளி உலோகம் இருக்கும்போது சுக்கிர பகவானின் முழுமையான அருள் கிடைத்து. நமது செல்வ வளம் அதிகரிக்கும். ஏனென்றால் சுக்கிர பகவானுக்கு உகந்த உலகம் என்பது வெள்ளி தான். அதனால் வெள்ளி அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களை நம் இரும்பு பீரோ, மரத்தால் செய்யப்பட்ட பீரோக்களில் இந்த மாதிரி அனைத்து இடத்திலும் இருப்பது போன்ற செய்தால் உங்கள் வீட்டின் பணவரவு அதிகரித்து, செல்வம் மடமடவன சேர்த்து கொண்டே இருக்கும். அதை நீங்களே சிறிது நாட்களில் உணர தொடங்குகிறீர்கள் கண்டிப்பாக இதை செய்து பாருங்கள் நல்ல பலனை கொடுக்கும்.
மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…
உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…
நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…
பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…