Advertisement
ஆன்மிகம்

இந்த 2 பொருள் மட்டும் போதும் வீட்டில் பணம் கட்டு கட்டாக சேர கொண்டே இருக்கும்!

Advertisement

பொதுவாக இந்த உலகில் ஒரு மனிதன் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டே இருக்கிறான் என்றால் அது பணம் மட்டுமாக தான் இருக்கும். தற்போதைய நாள்களில் ஒருவன் வாழ்கின்ற வாழ்க்கையை தீர்மானிப்பது பணமாக தான் இருக்கிறது. அனைவருக்கும் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் அப்படி பணம் சேர்ப்பதற்காக கஷ்டப்பட்டு பணத்தின் மீது ஒரு ஆசை இல்லாமல் அதற்கான வேலைகளை நாம் பார்க்க கூடாது. பொதுவாக சொல்வார்கள் ஒரு வேலையை சந்தோஷத்துடன் செய்தால் அதற்கான பலன் நமக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று. அதே போல் தான் பணத்திற்காக நாம் செய்யும் வேலைகளை சந்தோஷத்துடன் செய்தால் அந்த பணமே நம் வீடு தேடி வரும். ஆனாலும் இந்த பணத்தை ஆன்மீக ரீதியாக நாம் வீட்டிற்கு கொண்டு வர ஒரு பரிகாரம் இருக்கிறது அதைப் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

பரிகாரம்

அப்படி நமது வீட்டிற்கு கட்டு கட்டான பணத்தை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய சக்தி இரண்டு பொருட்கள்தான் உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் பணத்தை நம் வீட்டை நோக்கி ஈர்த்து தரும். அது கிராம்பு மற்றும் பச்சை கற்பூரம் தான் இந்த இரண்டு பொருட்களும் பணத்தை வசியம் செய்யக்கூடிய சக்திகள் நிறைந்தது. இதைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு இன்று வரை தெரியாது அதனால் இதை வைத்து நாம் பரிகாரம் செய்யும்போது நாம் வீட்டிற்கு கட்டு கட்டாக பணம் சேரும்.

Advertisement

பரிகாரம் செய்முறை

முதலில் பரிகாரம் செய்வதற்காக நாம் வைத்திருக்கும் கிராம்பை நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள் ஏனென்றால் முழு கிராம்பில் இருந்து வெளிவரும் வாசனையை விட கிராம்பை பொடியாக்கினால் அதிலிருந்து வரும் வாசனை அதிகமாக இருக்கும். பின்பு கிராம்பு பொடியிலன இருந்து ஒரு டீஸ்பூன், பச்சை கற்பூர தூளில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு ஒரு பச்சை நிற காட்டன் துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இப்போது இந்த பச்சை நிற முடிச்சை நீங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடம் அல்லது பீரோவில் வைத்து விடுங்கள்.

எங்கு வைப்பது

இப்படி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இந்த முடிச்சை வைப்பதன்

Advertisement
மூலம் அதிலிருந்து வரும் நல்ல வாசனை எந்த அளவிற்கு வெளி வருகிறதோ அந்த அளவிற்கு பணத்தை உங்கள் வீட்டிற்கு கட்டு கட்டாக கொண்டு வந்து சேர்க்கும். நாம் இப்படி வைத்திருக்கும் முடிச்சை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதாவது நாம் முடிந்து வைத்திருக்கும் முடிச்சுக்குள் இருக்கும் பொருட்களின் வாசம் குறைய தொடங்கியதும். முடிச்சுகள் இருக்கும் பொருட்களை எடுத்து மனிதனின் காலடி படாத இடத்தில்
Advertisement
போட்டுவிட்டு. மீண்டும் புதியதாக அந்த இருண்டு பொருட்களையும் சேர்த்து முடிச்சு போட்டு இருந்த இடத்தில் வைத்து விடுங்கள்.

வேறு எங்கு வைக்கலாம்

அதுமட்டுமில்லாமல் இந்த முடிச்சை நாம் பணம் வைக்கும் இடம் பீரோவில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இந்த முடிச்சை நீங்கள் உங்கள் தங்க நகைகள் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். அப்படி வைக்கும்போது உங்கள் நகை அடகு செல்லாமல் இருக்கும். அடகுக்கு சென்ற நகைகள் கூட பத்திரமாக வீடு வந்து சேரும். இரவில் ஒரு சிலருக்கு தூக்கம் வராமல் இருக்கும் அவர்கள் இந்த முடிச்சை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இதிலிருந்து வெளிவரக்கூடிய நல்ல வாசனை உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும். இது ஒரு நேர்மறையான ஆற்றலை தரக்கூடியது.

தாயத்து

குழந்தைகளுடன் இது எப்போதும் இருக்கும் வகையில் ஒரு சின்ன வெள்ளியால் ஆன தாயத்தில் இந்த இரண்டு பொருட்களையும் நிரப்பி பின் தாயத்தை கயிற்றில் கட்டி குழந்தைகளின் கழுத்தில் மாட்டி விடலாம். இப்படி செய்யும் போது இந்த இரண்டு பொருட்களிலும் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் குழந்தைகளை நெருங்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள், கெட்ட சக்தி, துர் சக்தி போன்றவை இடமிருந்து பாதுகாக்கும். இப்படி மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தையும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனையே தரும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

3 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

3 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

4 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

5 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

7 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

9 மணி நேரங்கள் ago