இந்த 2 பொருள் மட்டும் போதும் வீட்டில் பணம் கட்டு கட்டாக சேர கொண்டே இருக்கும்!

- Advertisement -

பொதுவாக இந்த உலகில் ஒரு மனிதன் எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டே இருக்கிறான் என்றால் அது பணம் மட்டுமாக தான் இருக்கும். தற்போதைய நாள்களில் ஒருவன் வாழ்கின்ற வாழ்க்கையை தீர்மானிப்பது பணமாக தான் இருக்கிறது. அனைவருக்கும் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் அப்படி பணம் சேர்ப்பதற்காக கஷ்டப்பட்டு பணத்தின் மீது ஒரு ஆசை இல்லாமல் அதற்கான வேலைகளை நாம் பார்க்க கூடாது. பொதுவாக சொல்வார்கள் ஒரு வேலையை சந்தோஷத்துடன் செய்தால் அதற்கான பலன் நமக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று. அதே போல் தான் பணத்திற்காக நாம் செய்யும் வேலைகளை சந்தோஷத்துடன் செய்தால் அந்த பணமே நம் வீடு தேடி வரும். ஆனாலும் இந்த பணத்தை ஆன்மீக ரீதியாக நாம் வீட்டிற்கு கொண்டு வர ஒரு பரிகாரம் இருக்கிறது அதைப் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

-விளம்பரம்-

பரிகாரம்

அப்படி நமது வீட்டிற்கு கட்டு கட்டான பணத்தை கொண்டு வந்து சேர்க்கக்கூடிய சக்தி இரண்டு பொருட்கள்தான் உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் பணத்தை நம் வீட்டை நோக்கி ஈர்த்து தரும். அது கிராம்பு மற்றும் பச்சை கற்பூரம் தான் இந்த இரண்டு பொருட்களும் பணத்தை வசியம் செய்யக்கூடிய சக்திகள் நிறைந்தது. இதைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு இன்று வரை தெரியாது அதனால் இதை வைத்து நாம் பரிகாரம் செய்யும்போது நாம் வீட்டிற்கு கட்டு கட்டாக பணம் சேரும்.

- Advertisement -

பரிகாரம் செய்முறை

முதலில் பரிகாரம் செய்வதற்காக நாம் வைத்திருக்கும் கிராம்பை நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள் ஏனென்றால் முழு கிராம்பில் இருந்து வெளிவரும் வாசனையை விட கிராம்பை பொடியாக்கினால் அதிலிருந்து வரும் வாசனை அதிகமாக இருக்கும். பின்பு கிராம்பு பொடியிலன இருந்து ஒரு டீஸ்பூன், பச்சை கற்பூர தூளில் இருந்து ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு ஒரு பச்சை நிற காட்டன் துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இப்போது இந்த பச்சை நிற முடிச்சை நீங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடம் அல்லது பீரோவில் வைத்து விடுங்கள்.

எங்கு வைப்பது

இப்படி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இந்த முடிச்சை வைப்பதன் மூலம் அதிலிருந்து வரும் நல்ல வாசனை எந்த அளவிற்கு வெளி வருகிறதோ அந்த அளவிற்கு பணத்தை உங்கள் வீட்டிற்கு கட்டு கட்டாக கொண்டு வந்து சேர்க்கும். நாம் இப்படி வைத்திருக்கும் முடிச்சை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதாவது நாம் முடிந்து வைத்திருக்கும் முடிச்சுக்குள் இருக்கும் பொருட்களின் வாசம் குறைய தொடங்கியதும். முடிச்சுகள் இருக்கும் பொருட்களை எடுத்து மனிதனின் காலடி படாத இடத்தில் போட்டுவிட்டு. மீண்டும் புதியதாக அந்த இருண்டு பொருட்களையும் சேர்த்து முடிச்சு போட்டு இருந்த இடத்தில் வைத்து விடுங்கள்.

வேறு எங்கு வைக்கலாம்

அதுமட்டுமில்லாமல் இந்த முடிச்சை நாம் பணம் வைக்கும் இடம் பீரோவில் தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இந்த முடிச்சை நீங்கள் உங்கள் தங்க நகைகள் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். அப்படி வைக்கும்போது உங்கள் நகை அடகு செல்லாமல் இருக்கும். அடகுக்கு சென்ற நகைகள் கூட பத்திரமாக வீடு வந்து சேரும். இரவில் ஒரு சிலருக்கு தூக்கம் வராமல் இருக்கும் அவர்கள் இந்த முடிச்சை உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இதிலிருந்து வெளிவரக்கூடிய நல்ல வாசனை உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும். இது ஒரு நேர்மறையான ஆற்றலை தரக்கூடியது.

-விளம்பரம்-

தாயத்து

குழந்தைகளுடன் இது எப்போதும் இருக்கும் வகையில் ஒரு சின்ன வெள்ளியால் ஆன தாயத்தில் இந்த இரண்டு பொருட்களையும் நிரப்பி பின் தாயத்தை கயிற்றில் கட்டி குழந்தைகளின் கழுத்தில் மாட்டி விடலாம். இப்படி செய்யும் போது இந்த இரண்டு பொருட்களிலும் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் குழந்தைகளை நெருங்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள், கெட்ட சக்தி, துர் சக்தி போன்றவை இடமிருந்து பாதுகாக்கும். இப்படி மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தையும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுக்கு நல்ல பலனையே தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here