Advertisement
ஆன்மிகம்

பையில் 10 ரூபாய் இல்லாதவனிடம் கூட பணம் கொட்ட வேண்டடுமா ? விளக்கில் இந்த இரண்டு பொருள் போட்டு மட்டும் தீபம் ஏற்றி பாருங்க!

Advertisement

வியாழக்கிழமை தினம் குபேரரை வணங்குவதற்கு ஏற்ற நாள். அதனால் அன்று குபேரருக்கு நாம் விளக்கு ஏற்றி அதற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்தி, உங்கள் வீட்டில் இருக்கும் குபேரனின் திருவுருவப்படம் அல்லது குபேரரின் சிலையை சுத்தமாக தொடைத்து, அதன் மூலம் ஜவ்வாது தடவி, சந்தனம் குங்குமம் ஆகியவற்றை வைத்து அலங்காரம் செய்து. பூக்களை வைத்து பூஜை அறையை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

108 முறை உச்சரிக்க வேண்டும்

பின்பு பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அதில் 1 ரூபாய் நாணயம் மற்றும் 2 ஏலக்காய் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு மஞ்சள் நிற திரி போட்டு விளக்கை ஏற்றி குபேரருக்கு நைவேத்தியமாக இனிப்பு பொருட்கள் அல்லது ஏதேனும் பழ வகைகளை வைத்துக் கொள்ளுங்கள். பின் இந்த விளக்கின் முன் அமர்ந்து கொண்டு “ஓம் லட்சுமி குபேராய நமஹ” அல்லது ” ஓம் மகாலட்சுமியே போற்றி” என்று ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிங்கள். இதை ஒரு கணக்கு வைத்து 108 முறை என்ற கணக்கில் கூட நீங்கள் உச்சரிக்கலாம். நீங்கள் இப்படி ஒவ்வொரு முறையும் மந்திரத்தை உச்சரிக்கும் போது உதிரி பூக்களால் உங்கள் முன்பு ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு அர்ச்சனை செய்து அந்த பூக்களை தீபத்திற்கு முன் போடுங்கள்.

Advertisement

11 வாரம் கணக்கு வைத்து கொள்ளுங்கள்

பின்பு மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன் குறைந்தது ஒரு

Advertisement
பத்து நிமிடம் ஆவது குபேரையும் மகாலட்சுமி மற்றும் உங்கள் குலதெய்வத்தையும் மனதார நினைத்து உங்களுடைய எல்லா கஷ்டங்களும் நீங்க வேண்டும் அல்லது அதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டம், சண்டை
Advertisement
சச்சரவுகள், கடன் பிரச்சனை என அனைத்தும் தீரும். அதனால் இந்த பூஜையை தொடர்ந்து ஐந்து வாரம், ஏழு வாரம் அல்லது 11 வாரம் என கணக்கிட்டு இந்த பூஜையை செய்ய வேண்டும்.

ஏலக்காயை புதியதாக போட வேண்டும்

நீங்கள் தொடர்ந்து அனைத்து வியாழக்கிழமைகளிலும் இந்த பூஜையை செய்வதால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் விளக்கில் உள்ள எண்ணெய் மாற்றி விட்டு விளக்கை சுத்தமாக துடைத்துவிட்டு. விளக்கில் இருந்த ஏலக்காயை கால் படாத இடத்தில் போட்டுவிடுங்கள். நாணயத்தை நன்றாக துடைத்து விட்டு மீண்டும் விளக்கு ஏற்றி புதியதாக திரி போட்டு, அதில் நாணயத்தை போட்டு ஏலக்காயும் புதிதாக போட்டு விளக்கு ஏற்றலாம். இப்படி நீங்கள் கணக்கிட்ட வாரம் வரை பூஜை செய்து பூஜை முடிந்தவுடன். அந்த நாணயத்தை நன்றாக துடைத்துவிட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பீரோவில் பணம் வகைகள் வைக்கும் இடத்தில் வைத்தால் குபேரரின் அருளால் உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

6 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

7 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

8 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

12 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

12 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

12 மணி நேரங்கள் ago