பையில் 10 ரூபாய் இல்லாதவனிடம் கூட பணம் கொட்ட வேண்டடுமா ? விளக்கில் இந்த இரண்டு பொருள் போட்டு மட்டும் தீபம் ஏற்றி பாருங்க!

- Advertisement -

வியாழக்கிழமை தினம் குபேரரை வணங்குவதற்கு ஏற்ற நாள். அதனால் அன்று குபேரருக்கு நாம் விளக்கு ஏற்றி அதற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்தி, உங்கள் வீட்டில் இருக்கும் குபேரனின் திருவுருவப்படம் அல்லது குபேரரின் சிலையை சுத்தமாக தொடைத்து, அதன் மூலம் ஜவ்வாது தடவி, சந்தனம் குங்குமம் ஆகியவற்றை வைத்து அலங்காரம் செய்து. பூக்களை வைத்து பூஜை அறையை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

108 முறை உச்சரிக்க வேண்டும்

பின்பு பூஜை அறையில் மண் விளக்கை வைத்து அதில் 1 ரூபாய் நாணயம் மற்றும் 2 ஏலக்காய் போட்டு, நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு மஞ்சள் நிற திரி போட்டு விளக்கை ஏற்றி குபேரருக்கு நைவேத்தியமாக இனிப்பு பொருட்கள் அல்லது ஏதேனும் பழ வகைகளை வைத்துக் கொள்ளுங்கள். பின் இந்த விளக்கின் முன் அமர்ந்து கொண்டு “ஓம் லட்சுமி குபேராய நமஹ” அல்லது ” ஓம் மகாலட்சுமியே போற்றி” என்று ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிங்கள். இதை ஒரு கணக்கு வைத்து 108 முறை என்ற கணக்கில் கூட நீங்கள் உச்சரிக்கலாம். நீங்கள் இப்படி ஒவ்வொரு முறையும் மந்திரத்தை உச்சரிக்கும் போது உதிரி பூக்களால் உங்கள் முன்பு ஏற்றி வைத்திருக்கும் தீபத்திற்கு அர்ச்சனை செய்து அந்த பூக்களை தீபத்திற்கு முன் போடுங்கள்.

- Advertisement -

11 வாரம் கணக்கு வைத்து கொள்ளுங்கள்

பின்பு மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன் குறைந்தது ஒரு பத்து நிமிடம் ஆவது குபேரையும் மகாலட்சுமி மற்றும் உங்கள் குலதெய்வத்தையும் மனதார நினைத்து உங்களுடைய எல்லா கஷ்டங்களும் நீங்க வேண்டும் அல்லது அதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டம், சண்டை சச்சரவுகள், கடன் பிரச்சனை என அனைத்தும் தீரும். அதனால் இந்த பூஜையை தொடர்ந்து ஐந்து வாரம், ஏழு வாரம் அல்லது 11 வாரம் என கணக்கிட்டு இந்த பூஜையை செய்ய வேண்டும்.

ஏலக்காயை புதியதாக போட வேண்டும்

நீங்கள் தொடர்ந்து அனைத்து வியாழக்கிழமைகளிலும் இந்த பூஜையை செய்வதால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் விளக்கில் உள்ள எண்ணெய் மாற்றி விட்டு விளக்கை சுத்தமாக துடைத்துவிட்டு. விளக்கில் இருந்த ஏலக்காயை கால் படாத இடத்தில் போட்டுவிடுங்கள். நாணயத்தை நன்றாக துடைத்து விட்டு மீண்டும் விளக்கு ஏற்றி புதியதாக திரி போட்டு, அதில் நாணயத்தை போட்டு ஏலக்காயும் புதிதாக போட்டு விளக்கு ஏற்றலாம். இப்படி நீங்கள் கணக்கிட்ட வாரம் வரை பூஜை செய்து பூஜை முடிந்தவுடன். அந்த நாணயத்தை நன்றாக துடைத்துவிட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பீரோவில் பணம் வகைகள் வைக்கும் இடத்தில் வைத்தால் குபேரரின் அருளால் உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here