ஒரு சிலர் நம்மிடம் சொல்வார்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் அவசியம் இல்லை அதையும் தாண்டி இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு குடும்பமும் வேண்டும் என்பார்கள். அதிக பணம் இருந்தால் நம்முடைய நிம்மதி பறிபோகும் மனதளவில் நம்மிடம் நிம்மதி இருக்காது என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இவர்களெல்லாம் இவ்வாறு கூறுவது வெறும் வாய் வார்த்தையாக தான் இருக்கும். நிஜம் என்னவென்று தெரியுமா இந்த உலகில் ஒரு குழந்தை ஜனனிக்கும்போதில் இருந்து அந்த குழந்தை வளர்ந்து முதுமை பருவம் அடைந்து மறைந்து போகும் வரை உள்ள இந்த இடைப்பட்ட காலத்தில் பணம் இல்லை என்றால் இந்த உலகில் ஒன்றும் செய்ய இயலாது.
ஆம் இப்போது ஒரு உயிர் புதிதாக பிறப்பதற்காகவே மருத்துவமனையில் இலட்ச கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை எல்லாம் உருவாகிவிட்டது. இதே உயிர் வளர்ந்து பெரியவனாகி இறக்கும் தருவாயில் இருக்கும்போது கூட ஏன் அந்த உயிர் இறந்த பின்னும் கூட நாம் பணம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த உலகில் பணம் இல்லால ஒன்றுமே செய்ய முடியாது. பணத்தைவிட குடும்பம் முக்கியம், நண்பர்கள் முக்கியம், உறவினர்கள் எல்லாம் முக்கியம் என அனைவரும் கூறுவார்கள் ஆனால் அதே பணம் நம்மிடம் இல்லை என்றால் இந்த அத்தனை உறவுகளுமே சற்று தள்ளியே நிற்பார்கள். நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இது தான் உண்மை.
அப்படியே நாம் பணம் சம்பாதித்தாலும் நமக்கு வரும் பணத்தை விட நாம் செலவு செய்யும் பணம் அதிகமாக இருக்கிறது காரணம் விலைவாசி உயர்வு ஆனால் நம் சம்பளம் மட்டும் என்றுமே உயர்வது போல்
இல்லை. இப்படி இந்த பணத்தினால் நம் மறந்த மகிழ்ச்சிகள் எவ்வளவோ, நமக்கு கிடைக்காத மகிழ்ச்சிகள் எவ்வளவோ, நாம் தொலைத்த மகிழ்ச்சிகள் எவ்வளவோ, இந்த பணத்தை நாம் வீட்டிற்கு கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு லட்சுமி தேவியின் அருள் நமக்கு வேண்டும் அதற்காக லட்சுமி தேவிக்கு உரிய மந்திரத்தை நீங்கள் தினமும் அரை மணி நேரம் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் நீங்கள் வேண்டிய பணம் உங்களின் வீடு தேடி வரும்.இந்த மந்திரத்தின் பெயர் லட்சுமி கணபதி மந்திரம் ஆகும் இந்த மந்திரத்தை நீங்கள் தினசரி அரை மணி நேரம் சொல்லி வந்தாலே போதும் உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனை, பண கஷ்டங்கள், பொருளாதார ரீதியாக இருக்கும் அனைத்து கஷ்டங்களும் அடியோடு நீங்கி உங்கள் வீட்டில் இருக்கும் பணமாக இருந்தாலும் செல்வ வளங்கள் என அனைத்தும் பெருகிக்கொண்டே இருக்கும். இந்த மந்திரத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் நீங்கள் உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்கும் பொழுது, தூங்குவதற்கு முன்பாக, தூங்கி எழுந்தவுடன் இப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த மந்திரத்தை சொன்னால் போதும் பணம் உங்கள் வீடு தேடி வரும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.
“சதுர்புஜம் பாசதரம் கணேசம்”
“ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா”
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…
மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…
நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…
பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…
மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…