கோடைக்காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய பழங்களாக மாம்பழமும் தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன. அதே சமயத்தில் மிகவும் ஆரோக்கியம் தரும் ஒரு பழமாக முலாம்பழம் உள்ளது. உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதில் முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்று. இந்த பழத்தை அப்படியே சாப்பிட நன்றாக இருக்காது. அதனை சர்க்கரையில் தொட்டு தான் சாப்பிட முடியும். இல்லையெனில் அதன் கனிந்த பகுதியை எடுத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும். இந்த பழம் பெரும்பாலும் கோடை காலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
இந்த பழத்தில் எவ்வளவு சுவை நிரம்பி இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆரோக்கிய குணமும் நிரம்பியுள்ளது. இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. இதைத் தவிர பொட்டாசியம் மற்றும் மக்னேசியம் தாது நிறைந்துள்ளது. கலோரி அளவு குறைவாகவும் மிகுந்த நீர் சத்து நிரம்பியதாகவும் இருக்கிறது. இந்த பழம் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக எல்லாவற்றையும் முலாம் பழம் என்று தமிழிலும் மஸ்க்மெலான் என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றோம். மேல்தோல் சிறிது அழுத்தமாகவும் அதனுள்ளே மிருதுவான இன்னொரு தோல் போன்ற பகுதியும் காணப்படுகிறது.
பொதுவாக முலாம் பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு குடிப்பது வழக்கம். ஆனால் சுவை மிகுந்த இந்த முலாம் பழங்களை கொண்டு நிறைய வித்தியாசமான ரெசிபிகளையும் செய்யலாம். அந்த வகையில் முலாம்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் மில்க் ஷேக் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாகவே மில்க் ஷேக்குகளுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அதுவும் உணவு பிரியர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. இந்த மில்க் ஷேக் செய்வதற்கு பால், முலாம் பழம் இருந்தால் போதும் இதை வெகு எளிதாக நாம் வீட்டிலேயே செய்து விடலாம்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…