வெண்டி அல்லது வெண்டைக்காயானது மல்லோ என்று அழைக்கப்படும் மால்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சளி, காய்ச்சலைத் தடுப்பதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால், அதன் வழவழப்புத்தன்மையைப் பார்த்ததும் பலர் அதை விரும்புவதில்லை. வெண்டைக்காயில் உள்ள பெக்டின் மற்றும் கோந்துத்தன்மையே அதிலுள்ள வழவழப்புத்தன்மைக்கு முக்கியக் காரணமாகும். இதில் கரையும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் ரத்தத்தில் கொழுப்பு மற்றும் பித்த நீர் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். மேலும் கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் பார்த்துக்கொள்ளும். வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து நிறைந்த கோந்துப்பொருளானது உணவு செரிமானதும் கரையா நார்ச்சத்தாக மாறி குடலை பாதுகாப்பதுடன் மலக்குடலில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
மருத்துவ குணம் நிறைந்த வெண்டைக்காயை லேடிஸ் ஃபிங்கர் என்று அழைப்பார்கள். பெண்களின் விரலைப்போன்று வெண்டைக்காய் மென்மையாக இருப்பதால் அப்படி அழைக்கப்பட்டாலும் பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது. ஆண்மை பலத்தை அள்ளித்தரும் சிறப்பு வெண்டைக்காய்க்கு உண்டு. குறிப்பாக வெண்டைச்செடியின் வேரில் அந்த சக்தி அதிகமாகவே உள்ளது. ஆயுர்வேத இலக்கியத்தின் கூற்றுப்படி வெண்டைக்காயின் வேர் பாலியல் வீரியம் இழந்தவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது. வெயிலில் காய வைத்து எடுத்த வெண்டைக்காய் வேரை பொடியாக்கி அதில் 5 அல்லது 10 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உறவில் அதீத ஈடுபாடு ஏற்படும். மிக முக்கியமாக விந்து உற்பத்தியை அதிகரித்து ஆண்மை பலத்தைக் கூட்டும்.
வெண்டை வேர் மட்டுமல்லாமல் அதன் காயில் மசியல், பொரியல், மோர்க்குழம்பு என பலவழிகளில் சமைத்துச் சாப்பிட்டு வரலாம். இரவில் வெண்டைக்காயை துண்டு துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் நீரூற்றி அதில் போட்டு ஊற வைத்து காலையில் எழுந்ததும் அருந்தலாம். வெண்டைக்காய் ஊறிய இந்த நீரை ஓக்ரா வாட்டர் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த ஓக்ரா வாட்டரை பலரும் விரும்பி அருந்துகிறார்கள். வெண்டைக்காயை சிறு துண்டுகளாக்கி நீரில் ஊறவைப்பதால் நீர்ச்சத்து மற்றும்
வெண்டைக்காயில் சூப் செய்து அருந்துவது மிகவும் நல்லது. சளி,
சிறுவயதில் குழந்தைகளை வெண்டைக்காய் சாப்பிட வைப்பதற்காக வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில் வெண்டைக்காயை சமைத்துச் சாப்பிடுவதால் மூளை வளர்ச்சியடையும். நினைவுத்திறன் அதிகரிக்கும். சிறுவர்களுக்கு மட்டுமல்ல வயதானவர்களுக்குத்தான் ஞாபக மறதி ஏற்படும். எனவே அவர்கள் அவசியம் வெண்டைக்காய் சாப்பிட வேண்டும். மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவுவதுடன் அறிவாற்றல், கற்றல் மற்றும் நினைவகத்தை மேம்படுத்தவும் உதவும். டிமென்ஷியா எனப்படும் அல்சைமர் நோய்க்கு வெண்டைக்காய் சிறப்பான தீர்வு தரும். கண்களுக்கு போதிய பாதுகாப்பளிப்பதுடன் கண்புரை நீங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆகவே, வெண்டைக்காயை ஏதாவது ஒருவகையில் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும் அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது…
நாகர்கோவில் கன்னியாகுமரி ஏரியால ரொம்பவே பேமஸ் ஆக இருக்கக்கூடிய ஒரு சூப்பரான சிம்பிளான அவியல் பாக்க போறோம். வீட்ல நிறைய…
வாரத்துக்கு மூணு தடவையாவது நம்ம கீரை சாப்பிட்டால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் டெய்லி…
அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நிச்சயமாக கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று பலர் கூற கேட்டிருப்போம் அறிவியல்…
தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…
மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய…