மதிய உணவிற்காக சாதம் செய்து குழம்பு, கூட்டு, பொரியல் என்று பலவிதமான டிஷ்களை செய்து வைத்தாலும் இறுதியாக ரசம் ஊற்றி சாப்பிட்டால் மட்டும்தான் முழு திருப்தியாக இருக்கும். ஒரு சில வீடுகளில் தினமும் ரசம் வைப்பார்கள். நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சரியான முறையில் செரிமானம் ஆவதற்காக ரசத்தை இறுதியாக சாப்பிடுகிறோம். இதில் சேர்த்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தும் நமது உடலின் சீரண சக்தியை அதிகரிக்கின்றன.
எனவே எந்த உணவை சாப்பிட்டாலும் இறுதியாக ரசத்தை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டோம் என்றால் வயிற்று பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. அவ்வாறு தினமும் ரசம் வைப்பதை மிகவும் சுலபமாக்கும் வகையில் இந்த ரச பொடியை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மாதங்கள் ஆனாலும் இதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
கல்யாண வீட்டு ரசம் போல அலாதியான சுவையில் சப்புக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு இருக்கக்கூடிய இந்த ரசப்பொடியை இதே அளவுகளில் ஒரு முறை செய்து பாருங்கள். பிறகு எப்பொழுதும் இப்படியே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். ரசம் என்றால் அதற்கு இந்த ரசப்பொடி தான் மிகவும் முக்கியம்.
அவசரத்திற்கு ரசப்பொடி அரைத்து ரசம் வைக்க முடியாதவர்கள், இது போல மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப் போல சூப்பரான ரசத்தை வைத்து வேலையை முடித்து விடலாம். பாட்டி காலத்து கைப்பக்குவத்தில் சுவையான ரசப்பொடி அரைக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…
பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…