ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை பொறுத்து தான் அவற்றின் சுவை மாறுபடுகிறது. அதிலும் காலை மற்றும் மாலை வேளையில் எளிமையான உணவுகளை மட்டும் தான் செய்து சாப்பிடுகிறோம். அவ்வாறு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இவ்வாறான உணவுகளை தான் அடிக்கடி செய்கின்றோம்.
ஆனால் ஒருமுறை இப்படி வித்தியாசமாக ஜவ்வரிசியில் ஒரு கிச்சடி செய்து பாருங்கள். இதனை கேட்கும்போதே வித்தியாசமாக இருக்கிறதல்லவா? நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் தான் இருக்கும் இதன் சுவையும் இருக்கும். இதனை செய்வதும் மிகவும் சுலபமான விஷயம் தான். வாருங்கள் இந்த சுவையான ஜவ்வரிசி கிச்சடியை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.ஜவ்வரிசி உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரும் என்று புதிதாக யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் ஜவ்வரிசி சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் ஆரோக்கியமின்மையை சரி செய்து விடும் தன்மை இந்த ஜவ்வரிசி உண்டு.
ஜவ்வரிசியானது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு வெளியாதல் போன்ற செரிமானம் தொடர்பான எந்த பிரச்சனையையும் இது சரி செய்கிறது. ஏனெனில் ஜவ்வரிசி செரிமான அமைப்பில் செயல்ப்பட்டு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எதிர்ப்பு ஸ்டார்ச்களை கொண்டுள்ளது.இதை நாம் தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் கட்டாயமாக எடுத்துக் கொள்வது சிறப்பு. அந்த வகையில் இந்த ஜவ்வரிசியை பொடித்து ஒரு ஆரோக்கியமான முறையில் கிச்சடி எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…
அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…
மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…