மீதமான இட்லியில் எல்லார் வீட்டிலும் உப்புமா செய்வது வழக்கம் தான். ஆனால் ஒருமுறை இப்படிகைமா இட்லி செய்து பாருங்கள். இந்த கைமா இட்லிக்கு ஒரு தனி சுவை இருக்கும். கைமா இட்லியுடன் சேர்த்து தொட்டுக்கொள்ள எதுவும் தேவை படாது .
இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்லி காலை மற்றும் இரவு நேரங்களில் உணவாக பரிமாறப்படுகிறது. இட்லி உடன் சட்னி, சாம்பார், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும் . கைமா இட்லி, மீதமான இட்லி அல்லது ஆரிய இட்லியுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும். மசாலாவுடன் கலந்து பரிமாறப்படுகிறது. இவ்வாறு செய்யும் பொழுது இட்லியின் சுவை கூடும் அதே சமயத்தில் இட்லி உப்புமா போன்று செய்யாமல், புதுமையாக கைமா இட்லி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
பொதுவாகவே இட்லி என்பது கொஞ்சமாகத்தான் மீதமாகும் அல்லவா. நான்கு அல்லது ஐந்து இட்லி மீதமாகும். அந்த இட்லியை இட்லி உப்புமா செய்தால் நீ சாப்பிடுவதா, நான் சாப்பிடுவதா என்ற பிரச்சினை இருக்கும். அதுவே மீதமான இட்லியில் இப்படி கைமா இட்லி சமைத்து கொடுத்து பாருங்கள். சூப்பரான மசாலா பொருட்கள் நிறைந்த காரசாரமான ஒரு ரெசிபி இது. இப்படி மீதமான இட்லியை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் மிச்சம் வைக்காமல் நீயா நானா என சண்டை போட்டு கொண்டு சாப்பிடுவார்கள் என்றால் பாருங்களேன். வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…