நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து கொள்ளலாம். நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒரு விளாம்பழம் சாப்பிட்டு வர பித்தத்தை இது குறைக்கும்.
தினசரி இரண்டு பேரீச்சபழம் சாப்பிட்டு அதன்பின் பால் சாப்பிட்டால் குளுக்கோஸ் நேரடியாக நம் உடலுக்குள் சேருகிறது.
தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பல பலம் அடையும். விட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற இரும்பு சத்துக்கள் கொய்யாப்பழத்தில் உள்ளது.
உடல் நலம் குன்றியவர்களின் தோல் நிறம் மாறியிருக்கும் மீண்டும் நிறம் பெற அத்திப்பழம் சாப்பிட வேண்டும் இழந்த இயற்கை நிறத்தை பெற அத்திப்பழம் உதவியாக இருக்கும்.
மாதுளை பழ சாறுடன் தேன் கலந்து சாப்பிட இதயம் வலுவடைகிறது மேலும் ஜீரண சக்தியையும் இது அதிகரிக்கும்.
டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சரியாகிவிடும்.
குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி கொண்டு வந்து மண்ணில்லாமல் கழுவி நிழலில்
உலர்த்தி எடுங்கள், பின்பு 24 மணி நேரம் வெயிலிலும் உலர்த்திக் கொள்ளுங்கள், பின்பு இடித்து பொடி செய்த 100 கிராம், மிளகு 10 கிராம் சேர்த்து சேர்த்து கண்ணாடி போட்டியில் வைக்கவும் மூன்று மாதங்கள் 1/2 ஸ்பூன் அளவு காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வரவும் சோகையை நீங்கி இரத்தம் பெருகும்.கருவேப்பிலை, மிளகு சேர்த்து நெயில் வறுத்து சுடுதண்ணீர் ஊற்றி அரைத்து குழந்தைகளுக்கு குளிப்பாட்டியவுடன் கொடுத்து வந்தால் மந்தம் குறையும் மேலும் நன்றாக பசியும் எடுக்கும்.
குழந்தைகளுக்கு வாய்ப்புண் இருந்தால் சரியாக பால் குடிக்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும். இதற்கு சிறிது பாலில் மாசிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து நாக்கில் தடவ குணமாகும்.
முருங்கை இலையை கசக்கி அதிலிருந்து சாறு எடுத்து அதை சூடாக்கி அரை சங்கு ஊற்றவும் வயிற்று உப்பிசம் மற்றும் மலக்கட்டு நீங்கும்.
மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…
மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…
பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…
மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…
முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…