Advertisement
ஆன்மிகம்

சுமங்கலி பெண்கள் இந்த தானத்தை மட்டும் வாங்க கூடாது! அது உங்களுக்கு கஷ்டத்தை தரும்!

Advertisement

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க, புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க, நாக தோஷம் நீங்க, பிரதிஷ்டை தோஷம் நீங்க என இது போன்ற தோஷங்களை நீங்குவதற்கு புரோகிதர்கள் அல்லது ஜோதிடர் சில கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து பின் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கயிறு என வைத்து ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அல்லது ஏழு சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க சொல்லி இருப்பார்கள். இதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது தெரிந்து கொடுக்க வேண்டும் ஆம் இதை 50 வயதுக்கு மேற்பட்ட சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் அல்லது பேரன் பேத்தி எடுத்த சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

அதனால் இந்த தானத்தை புதியதாக திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், சிறு வயதில் இருக்கும் குடும்ப பெண்கள் இந்த தானத்தை கொடுக்கக் கூடாது. கோவிலுக்கு செல்லும் பெண்களும் யாராவது தானமாக எதுவும் கொடுத்தாள் அது ஏன் எதற்கு என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு அதை வாங்கிக் கொள்ளுங்கள். ராமேஸ்வரம், திருநள்ளாறு, காளஹஸ்தி இந்த கோவில்களில் எல்லாம் இது போன்ற பரிகாரங்கள் நிறைய செய்யப்படும்

Advertisement
அதனால் அங்கு செல்லும் சுமங்கலி பெண்கள் சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மீதம் கோவில்களில் பிரார்த்தனை செய்து தரப்படும் வெற்றிலை, பாக்கு, தாலி கயிறு இதையெல்லாம் நாம் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்.
Advertisement

இன்னும் சில தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக பரிகாரம் செய்து, வெற்றிலை பாக்குடன், ரவிக்கையும், புடவையும் கூட தானமாக தருவார்கள். அதையும் கூட சுமங்கலி பெண்கள் வாங்குவது நல்லது கிடையாது. நீங்கள் யோசிக்கலாம் என்னடா பரிகாரம் செய்து தானம் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள், தானமும் வாங்கவும் கூடாது என்று சொல்கிறார்கள். பொதுவாக இது போன்ற பரிகாரங்களை செய்து 50 வருட திருமண வாழ்க்கையில் இருந்தவர்களுக்கு தானமாக இதை கொடுக்கும்போது அவர்கள் வாங்குவதால் அந்த தோஷம் அவர்களுக்கு தாங்காது, சத்தி இல்லாமல் போய்விடும். அதனால் அவர்கள் வாங்குவதில் எந்தவித பிரச்சனையும் வராது. ஆனால் வயது குறைந்த சுமங்கலி பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லாத சுமங்கலி பெண்கள் இதை வாங்கிக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு அது கஷ்டத்தை ஏற்படுத்தும். அதனால் பரிகாரம் செய்பவர்களும் தானத்தை பார்த்து கொடுங்கள் வாங்குபவர்களும் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

10 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

20 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago