சுமங்கலி பெண்கள் இந்த தானத்தை மட்டும் வாங்க கூடாது! அது உங்களுக்கு கஷ்டத்தை தரும்!

- Advertisement -

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க, புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க, நாக தோஷம் நீங்க, பிரதிஷ்டை தோஷம் நீங்க என இது போன்ற தோஷங்களை நீங்குவதற்கு புரோகிதர்கள் அல்லது ஜோதிடர் சில கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து பின் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கயிறு என வைத்து ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அல்லது ஏழு சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க சொல்லி இருப்பார்கள். இதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது தெரிந்து கொடுக்க வேண்டும் ஆம் இதை 50 வயதுக்கு மேற்பட்ட சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும் அல்லது பேரன் பேத்தி எடுத்த சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

-விளம்பரம்-

அதனால் இந்த தானத்தை புதியதாக திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், சிறு வயதில் இருக்கும் குடும்ப பெண்கள் இந்த தானத்தை கொடுக்கக் கூடாது. கோவிலுக்கு செல்லும் பெண்களும் யாராவது தானமாக எதுவும் கொடுத்தாள் அது ஏன் எதற்கு என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு அதை வாங்கிக் கொள்ளுங்கள். ராமேஸ்வரம், திருநள்ளாறு, காளஹஸ்தி இந்த கோவில்களில் எல்லாம் இது போன்ற பரிகாரங்கள் நிறைய செய்யப்படும் அதனால் அங்கு செல்லும் சுமங்கலி பெண்கள் சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மீதம் கோவில்களில் பிரார்த்தனை செய்து தரப்படும் வெற்றிலை, பாக்கு, தாலி கயிறு இதையெல்லாம் நாம் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

இன்னும் சில தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக பரிகாரம் செய்து, வெற்றிலை பாக்குடன், ரவிக்கையும், புடவையும் கூட தானமாக தருவார்கள். அதையும் கூட சுமங்கலி பெண்கள் வாங்குவது நல்லது கிடையாது. நீங்கள் யோசிக்கலாம் என்னடா பரிகாரம் செய்து தானம் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள், தானமும் வாங்கவும் கூடாது என்று சொல்கிறார்கள். பொதுவாக இது போன்ற பரிகாரங்களை செய்து 50 வருட திருமண வாழ்க்கையில் இருந்தவர்களுக்கு தானமாக இதை கொடுக்கும்போது அவர்கள் வாங்குவதால் அந்த தோஷம் அவர்களுக்கு தாங்காது, சத்தி இல்லாமல் போய்விடும். அதனால் அவர்கள் வாங்குவதில் எந்தவித பிரச்சனையும் வராது. ஆனால் வயது குறைந்த சுமங்கலி பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லாத சுமங்கலி பெண்கள் இதை வாங்கிக் கொள்ளும் பொழுது அவர்களுக்கு அது கஷ்டத்தை ஏற்படுத்தும். அதனால் பரிகாரம் செய்பவர்களும் தானத்தை பார்த்து கொடுங்கள் வாங்குபவர்களும் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here